புதன், 30 ஏப்ரல், 2014

பிள்ளையாரின் பிறப்பு



இன்று பிள்ளையார் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.
1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்
2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்
4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.
vinayagar_01
இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.
மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.
பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.
உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.
பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.
வடக்கே தெற்கே ஒட்டி
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதாமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு
ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும்ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.
வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்
சப்பாணிப் பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)
வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.
எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!
கட்டுரைக்கு உதவி -
தமிழர் நாட்டுப்பாடல் நூல் – நா வானமாமலை எம்.ஏ. எல்.டி

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சித்தேசன்




அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள்(நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள்.                                                                 
- ந.முருகேச பாண்டியன் (கிராமத்து தெருக்களின் வழியே)
இளமைக் காலத்தில் விடுமுறை நாட்களில் கிராமத்திலுள்ள தாய்வழித்தாத்தா வீட்டிற்குச் செல்வது கொண்டாட்டமான விசயம். அந்த நாட்களை இப்போது நினைக்கும்போதும் மகிழ்வாகயிருக்கிறது. பெரிய காரை வீடானாலும் சின்ன குடிசை வீடானாலும் திண்ணையோடிருக்கும் வீடுகள், வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்கள், ஓசிக்கஞ்சி எனக் கேலி செய்யும் மாமா முறையினர், கிணற்றடியின் குளுமை என கிராமத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய ஆச்சர்யங்களை தந்துகொண்டேயிருக்கும். கிராமத்தின் நினைவுகளையூட்டும் ந.முருகேச பாண்டியனின் ‘கிராமத்துத் தெருக்களின் வழியே’ நூல் நல்லதொரு ஆவணம்.
கிராமங்களில் வெள்ளுடை உடுத்தி மணியாட்டிக்கொண்டு வரும் சாமியார்களை இளம் வயதில் பார்த்திருக்கிறேன். மணியாட்டிக்காரர்கள் மணியை தலைகீழாக கவிழ்த்தி அதில் கம்பை வைத்து சுழற்றும் போது வரும் மணியோசையும், மணியாட்டிக்காரர்கள் பாடும் பாட்டும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று எங்கம்மா கூறினார். அந்தப் பாட்டில் நெல்லின் பலரகப்பெயர்களை சேர்த்து பாடுவதையும் குறிப்பிட்டார்.
மணி
சமீபத்தில் மதுரை கூடல்நகர் அருகே நானும் நண்பரும் பயணித்துக் கொண்டிருந்தபோது மணியாட்டிக்காரர்களை பார்த்தோம். அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது திருச்செந்தூர் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக இப்படி மணியடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று நெல், பணம் காணிக்கையாக பெறுவதாகக் கூறினார். திருச்செந்தூரில் இவர்களுக்கென்று பாத்தியப்பட்ட மடம் ஒன்று இருக்கிறதாம். தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணிமூலம் ஆகிய நாட்களை ஒட்டி கிராமங்களில் பயணிப்பார்களாம். குடும்பத்தில் மூத்த உறுப்பினர் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பெரியவர் கூறினார்.
‘அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்’ என அன்பேசிவத்தில் இறுதியில் கமல்ஹாசன் சொல்லும் வரிகள் ஞாபகம் வருகிறது. நீங்கள் மணியாட்டிக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குறித்து விரிவாக பதிலிடுங்களேன்.
நன்றி

பிள்ளையாரின் பிறப்பு



இன்று பிள்ளையார் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.
1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்
2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்
4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.
vinayagar_01
இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.
மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.
பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.
உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.
பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.
வடக்கே தெற்கே ஒட்டி
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதாமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு
ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும்ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.
வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்
சப்பாணிப் பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)
வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.
எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!
கட்டுரைக்கு உதவி -
தமிழர் நாட்டுப்பாடல் நூல் – நா வானமாமலை எம்.ஏ. எல்.டி

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

மணிமேகலையின் ஜாவா -2



தொடர்ச்சி..

(6)
மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் -
வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
அந்தி மாலை ஆயிழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து
ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன் யார்என மாதவன் கூறும் உரை
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்
ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத்
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என்
- என்ற பகுதியில் வரும் சில குறிப்புகளை ஆய்ந்தேன்.
அட்சயபாத்திரத்துடன் வான் வழியே (அந்தரம் ஆறாப்) பறந்து சென்று சாவகத்தீவில் இந்திரன் வழிவந்தோர் ஆளும் பதியில் ஒரு சோலையில் இறங்கும் மணிமேகலை அங்கு எதிர்ப்படும் தருமசாவகன் என்னும் முனிவரை வணங்கி அந்தநகரின் பெயரையும், அதை ஆளும் மன்னவன் யாரென்றும் வினவ, அந்தப்பதியின் பெயர் நாகபுரம் என்றும் அதை ஆள்வோன் பூமிசந்திரன் மகனான புண்ணியராசன் என்றும் அவன் பிறந்த நாள் முதலாய் வான்மழை பிழையாது பெய்திருக்க மண்செழித்து வளம்பல பெருகி மக்களும் பிணி நீங்கி மகிழ்ந்து வாழ்வதாய்ச் சொல்கிறார் அந்த அருந்தவமுனி தருமசாவகன்.
நாகபுரம், தருமசாவகன்!
நான் கரவாங் (Karawang) என்ற நகரில் சிதாரும் (Citarum) என்ற நதிக்கரையில் வாழ்ந்திருந்தேன்.
அந்த நதியின் பண்டைப்பெயர் ஸ்ரீதர்மநதியென்று தற்செயலாய்த் தெரியவந்தது. அந்த நதியை ஒட்டிய பிரதேசமே முன்னாளில் தருமநகரா என்ற ஹிந்துப்பேரரசாய் இருந்ததையும் அதைப் பொ.ச.நான்காம் நூற்றாண்டு (?) காலத்தில் ஆண்ட பூர்ணவர்மன் என்ற மன்னன் தன்னை விஷ்ணுவின் பிரதிநிதியாய்க் கொண்டு விஷ்ணுபாதம் என்று ஒன்றைச் செதுக்கி நல்லாட்சி செய்த செய்தியெல்லாம் பின்னர் தெரியவந்தது.
http://en.wikipedia.org/wiki/Tarumanagara

தருமசாவகன் நிச்சயம் இந்தப்பகுதியில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நாகபுரத்தைத் தேடும் முயற்சியில் பாண்டுங் என்ற மேற்குஜாவாவின் பிரதான நகரின் அருகில் காம்புங் நாகா (Kampung Naga) என்றோர் இடம் இருப்பதாகத் தெரியவந்தது. உடன் புறப்பட்டேன்.
java_manimekalai
மிகமிகத் தொன்மையான பகுதியது. நாகமலை எனும் மலையினூடே வளைந்து செல்லும் பாதை. இயற்கையின் அபரிமிதமான கொடையில் மரகதப்பச்சை அரசாட்சி.
பொது நீரோட்டத்தில் கலக்காமல் தங்களின் தொல்மரபின்படியே அந்த ஊர்மக்கள் இன்றும் தனித்து வாழ்கிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Kampung_Naga
அவர்கள் இன்றைய சுந்தானிய மொழியே பேசினாலும், முதியவர் சிலரிடம் துருவிக்கேட்டதில் தங்களின் தொல்மொழி பேசுவோர் மறைந்து விட்டதாகச் சொன்னார்கள். தங்களின் முன்னோர் வகுத்துத்தந்த மரபின் படி வாழ்வதே பெரும்பாடாய் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவர்களின் குலதேவதைக் கோயில் ஒன்று ஊர் மத்தியில் இருப்பதைக் கண்டேன். சுற்றிலும் துணியால் சுற்றி மறைத்திருந்தனர். அங்கு மட்டும் வெளியார்க்கு அனுமதி இல்லை என்று சொல்ல நான் அவர்களைப் போலவே இன்றும் உயிர்த்திருக்கும் தொல்குடியைச் சேர்ந்தவன், இந்தியாவிலிருந்து வந்திருப்பவன் என்று பணிவாய்க் கேட்டும் மறுக்க, பிரிய மனமின்றித் திரும்பினேன்.
மொழியையே தொலைத்துவிட்ட அவர்களுக்கு ஆபுத்திரன் கதையும் தெரிந்திருக்கவில்லை. சிலகாலம் அவர்களுடன் வாழ்ந்திருந்தால் அவர்கள் நம்பிக்கை பெற்றபின் பல அரியதகவல்கள் தெரியவரலாம். அதற்கு எனக்கு வாய்ப்பும் நேரமும் இல்லாமல் போய்விட்டது.
அடுத்து ‘தவளமால்வரை’ கண்டடைந்த காதை.
(7)
நாகபுரத்தின் சோலையொன்றில் உள்ள தருமசாவகன் குடிலில் மணிமேகலை என்றொரு பெண்துறவி வந்திருக்கும் செய்திகேட்டுத் தேடிவருகிறான் மன்னன் புண்ணியராசன்.
//அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
இங்கு இணை இல்லாள் இவள் யார்? என்ன //
பெருவனப்புடன் கையில் பாத்திரமேந்தி அறவடிவாய் நிற்கும் இந்தப்பெண் யாரென்று வினவ, மணிமேகலை தற்போது தன் கையில் இருக்கும் அந்தப்பாத்திரம் முற்பிறவியில் மன்னன் புண்ணியராசன், ஆபுத்திரன் என்ற பெயரில் பிறந்து மதுரையில் சரஸ்வதி அருளால் பெற்ற அமுதசுரபி என்று சொல்லி, அதைக் கொண்டு ஜாவானியர் பசிதீர்க்க அவன் வங்கமேறி வந்து வழியில் தொலைந்துபோய், அவன் இந்தப்பிறவியிலும் ஆவழித் தோன்றிய கதையையும் சொல்கிறாள் மணிமேகலை.
தவளமால்வரையைத் தேடிச் செல்லும் வழியில் பரந்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள்.
தவளமால்வரையைத் தேடிச் செல்லும் வழியில் பரந்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள்.
மணிபல்லவத் தீவுக்கு உடன் புறப்பட்டு வருவான் எனில் அவன் முற்பிறவிக் கதையனைத்தும் நினைவுக்கு வரும் என்றும் அதன்பின் அவன் பிறவிப்பிணியறுத்து அறவழிச் செல்வதும் எளிதாகும் என்றழைத்துப் பறந்து செல்ல, மன்னன் அமைச்சிடம் ஒரு திங்கள் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மரக்கலமேறி மணிபல்லவத்தீவுக்கு சென்று அங்கு தன் முற்பிறவிக் கதையெல்லாம் ஆடியில் தெரிவது போல் கண்டு தெளிய அவனுக்கு நல்லறம் நல்கி மீண்டும் அவனை சாவகம் திரும்பச் சொல்லிவிட்டு வஞ்சிமாநகரம் நோக்கி வான்வழியேறி மீள்கிறாள் மணிமேகலை.
புண்ணியராசன் சாவகம் மீண்டு தன் முற்பிறவிப் பெயரான ஆபுத்திரன் என்ற பெயரிலேயே ஆட்சியைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்பது இன்னும் அதே பெயரைச் சூட்டிக்கொள்ளும் ஜாவானிய ‘ஆபுத்ரா’க்களால் அறிய வருகிறது.
மன்னன் புண்ணியராசனுக்கு முற்பிறவியில் ஆபுத்திரன் என்று பெயர்வரக் காரணமாயிருந்த, எங்கோ குமரி மாவட்டத்தில் வயனங்கோட்டில் பிறந்த சிசுவை ஏழுநாட்கள் பாலூட்டிக் காத்திருந்த பசுவும் அவனுக்கு முன்னதாகவே ஜாவாவில் ‘தவளமால்வரை’ என்ற குளிர்ந்த மலைப்பகுதியில் ‘மண்முகன்’ என்ற முனியின் ஆசிரமத்தில் தோன்றி அவன் பிறக்கக் காத்திருந்ததாகவும் மணிமேகலை காப்பியத்தால் அறிகிறோம்.
அந்நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்என் சாவகத் தவள மால்வரை
மண்முகன் என்னும் மாமுனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன்குளம்பு உடையது
தன்நலம் பிறர்தொழத் தான்சென்று எய்தி
ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம்
தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து
மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப்
பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய//
எங்கிருக்கிறது தண்என் சாவகத் தவளமால்வரை!
(8)
தவளமால்வரை! சங்கதத்தில் தவளம் என்றால் வெண்மை. குளிர்ந்திருக்கும் வெண்குன்றம். தருமநகர மன்னர் ஆண்டது மாலவன் பாதம் கொண்டு என்று முன்னரே கண்டோம்.
இந்தோநேசிய விக்கிபக்கத்தில் கல்வெட்டு ஆதாரங்களைத் தெளிவாகவே தந்திருக்கிறார்கள். இந்தச்சுட்டியில் பாட்டூஜயா (Batujaya) வளாகத்தில் கிட்டிய விஷ்ணு சிலைகளையும் காணலாம்:
http://id.wikipedia.org/wiki/Kerajaan_Tarumanegara
//Kedua (jejak) telapak kaki yang seperti (telapak kaki) Wisnu ini kepunyaan raja dunia yang gagah berani yang termashur Purnawarman penguasa Tarumanagara//
மேலும் மணிமேகலை ‘அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து’ வருமிடத்தில் இந்திரன் வழித்தோன்றல்களே அங்கே அரசாள்பவர் என்பதைச் சுட்டும் வண்ணம் இதுவும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது:
//jayavi s halasya tarumendrsaya hastinah airavatabhasya vibhatidam padadavayam
Located nearby is the Prasasti Kebon Kopi I, also called Telapak Gadjah stone, with an inscription and the engraving of two large elephant footprints. The inscription read: These elephant foot soles, akin to those of the strong Airwata (elephant, which God Indra used to ride), belongs to Tarumanagara King who is successful and full of control.//
விக்கியின் ஆங்கிலப்பதிப்பில் இவ்வளவு விளக்கமாய் இல்லையென்றாலும் இதே குறிப்பிருக்கிறது:
ஆனால் தவளமால்வரை எங்கிருக்கிறது?
மலை என்றால் இந்தோநேசிய மொழியில் குணுங் (Gunung). வெள்ளைமலை – Gunung Putih – என்று எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்க அந்தப்பெயரில் ஓரிடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அது எங்கோ போர்னியோத்தீவில் வடக்கு கலிமந்தனில். சோர்வு தந்தாலும் தொடர்ந்து ஜாவாவின் மேற்குப்பகுதியில் தேடியிருந்தேன்
இந்தத்தேடலில் எனக்குத் துணையாய் இருந்தவன் எனக்குப் பல வருடங்கள் காரோட்டியும், உற்ற நண்பனுமான நூருதீன் என்பான். வலக்கரம் போலிருந்தவன். ஒரு சனியன்று என்னிடம் நீங்கள் தேடியிருக்கும் வெள்ளைமலை எங்கிருக்கிறதென்று தெரியாவிட்டாலும் வெள்ளை மடு (Kawah putih) ஒன்றிருக்கிறது ஒரு மலையுச்சியில் போகலாமா என்றான். உடன் கிளம்பினோம்.
java_kawah_putih_1
பாண்டுங் நகரைத் தாண்டி சிவிதே (Ciwidey) என்ற சிற்றூரின் அருகில் பாதுவா (Gunung Patuha) என்ற பசுமை ததும்பி வழியும் மலைப்பாதையில் பயணிக்கையிலேயே குளிர் தொடங்கிவிட்டது. மேலே செல்லச் செல்ல கடுங்குளிர். கிட்டத்தட்ட பத்துடிகிரிக்குச் சட்டென்று மாறும் வானிலை.
மதியம் 2 மணிக்கு மேல் உச்சியில் மேகம் வந்து மூடி விடும் என்பதால் வேகமாய்ச் சென்றோம்.
வெளியே சரிவிலெங்கும் மானாவாரியாய் ஸ்ட்ராபெர்ரிச் செடிகளைப் பயிரிட்டிருந்தார்கள்.
உச்சியை நெருங்கு முன்னே கந்தகநெடி மூக்கைத் துளைத்துச் செல்ல காரை நிறுத்திவிட்டு இறங்கினால் கல், மண் என்று திரும்பிய பக்கமெல்லாம் வெண்மை போர்த்தியிருந்தது!
java_kawah_putih_2
சற்றுத் தொலைவே இருந்தாலும் அதற்குமேல் உச்சிக்குப்போக தனியே ஜீப்பில் செல்ல வேண்டும். 2400 மீட்டர் உயரமான மலையது. அந்தப் பிரதேசமே சுண்ணாம்புக்கற்கள் நிறைந்து ஒளிவீசியிருக்க அந்த எரிமலையின் வாயை நெருங்கினோம். அதனுள்ளே இளம்பச்சை, வெளிர்நீலம் என்று நிறம் மாறி மாறித் தோன்றும் ஓர் ஆழமான துல்லியமான ஏரி. மூச்சடைக்க நின்றேன். என் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத அற்புதக்காட்சியது.
தவளமால்வரை உச்சியில் சகோ நூருதீனுடன்.
தவளமால்வரை உச்சியில் சகோ நூருதீனுடன்.
கண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளிரும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை.
அந்த மலையின் பக்கங்களிலிருந்து சுனைநீர் ஓடிச்சென்று சற்றுத் தொலைவில் தருமநகரப் பிரதேசத்தினூடே ஓடியிருக்கும் தருமநதியில் கலக்கிறது.
http://en.wikipedia.org/wiki/Kawah_Putih
அந்த மலையும் அமிலமடுவும் அப்பகுதி மக்களுக்கு மிகப்புனிதமானதும், பல அதிசயங்களும், ரகசியங்களும் கொண்டதென்று அறிய வந்தது. தங்கள் மூதாதையர் இறங்கிவந்து சந்திக்கும் இடமது என்பது அவர் நம்பிக்கை.
java_kawah_putih_3
கீழே இறங்கித் திரும்புகையில் பசீர்ஜம்பு (Pasir Jambu) என்றொரு கிராமத்தைக் கண்டு நிறுத்தி இறங்கினேன். தவளமால்வரை அருகில் மண்முக முனி இருந்த இடமோ!
பசீர் என்றால் மண். ஜம்பு என்றால் பாரதம். யாவத்வீப மண்ணில் ஜம்புத்வீபத்தின் பாரதமண் வந்து கலந்த இடமோ!
ஈராயிரமாண்டுகள் கடந்தும் நினைவூட்டி நிற்கும் பெயர்கள்.
மணிமேகலா தெய்வத்தைத் தொடர்கிறேன்.

(9)


திரை இரும் பௌவத்துத் தெய்வம்

இந்தத் தேடலின் இறுதிப்பகுதியிது. மணிமேகலை காப்பியத்துக்குப்பின் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் பதியப்பெறாத கதையிது என்றும் சொல்லலாம். இன்றவள் பெருமையை என் மூலம் சொல்ல வைப்பதும் அந்தக் கடலம்மையே.
காப்பியத்தின் நாயகி மணிமேகலை வாழ்வினை முற்றாய் ஊழ்வழி நடத்திச் சென்று அந்த அப்பிறவியில் அவள் காமத்தை வென்று துறவுக்கோலமாம் அறக்கோலம் பூணவைப்பதும் மணிமேகலா தெய்வமே.
கோவலனின் குலதேவதை மணிமேகலா என்ற அந்தக் கடலரசி. அவள் திரவியம் தேடித் திரைகடலோடியிருந்த வணிகர்களைக் காக்கும் தெய்வம். மாதவி மூலம் பிறக்கும் குழந்தைக்குத் தன் குலதெய்வத்தின் பெயரையே கோவலன் வைப்பதன் பின்னணிக்கதை சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் வருகிறது:
//இடைஇருள் யாமத்து எறி திரைப் பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள்
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்,
நண்ணு வழி இன்றி, நாள் சில நீந்த,
‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்!
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது
துன்பம் நீங்கித் துயர்க் கடல் ஒழிக!’ என,
விஞ்சையின் பெயர்த்து, விழுமம் தீர்த்த,
எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,
“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று//
கோவலன் மூதாதை ஒருமுறை கடலோடிச் செல்கையில் மரக்கலம் உடைந்து தத்தளித்திருக்கையில் அவன் செய்த அருந்தவப் பலனால், இந்திரன் ஏவலில் கடல்மிசை வாழ்ந்திருக்கும் மணிமேகலா எனும் அதிதேவதை அவன்முன் வந்து தோன்றி அஞ்சேல் என்று அவனைக் காத்துக் கரைசேர்த்த கதையினை நினைவுகூர்ந்து அந்த மணிமேகலாவின் பெயரே குழந்தைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாதவியின் கனவிலும் அந்தத் தேவதை தோன்றி தம் உருக்காட்டி மறைகிறது.
‘பரப்பு நீர்ப் பவ்வம் (பெருங்கடல்) பலர் தொழக் காப்போள்’ என்றும் ‘திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு’ என்றும் மணிமேகலை காப்பியத்தில் குறிக்கப்படும் அந்தக் கடலரசி, மணிமேகலையை மயக்கிலாழ்த்திக் கொண்டு சென்று மணிபல்லவத்தீவில் வைத்துத் துயிலெழுப்பி அவள் வாழ்வின் பயனை எடுத்தியம்பிப் பின்னர் ‘வேற்றுருவு எய்தவும், அந்தரம் திரியவும், ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க!’ என்றும், ‘மக்கள் யாக்கை உணவின் பிண்டம் ஆதலால் இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்’ என்றும் – விரும்பியவண்ணம் உருமாறவும், வான்மிசை ஏறிப்பறக்கவும், பசியை வெல்லவும் வல்ல – மூன்று மந்திரங்களைச் சொல்லித் தருகிறாள்.
manimekala_java_4
இறுதியில்
//வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால்// என்று வானோர்க்குப் பூசனையும் இந்திரவிழாவும் மறந்து போன பூம்புகாரைக் கடற்கோளில் மறைப்பதும் அவளே.
காப்பதும் அழிப்பதும் அந்தக் கடலன்னையே.
இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே!
எப்படி, எந்தப் பெயரில்?
(10)
பரப்பு நீர்ப் பவ்வம் பலர் தொழக் காத்திருக்கும் கடலரசி ராத்து கிடுல்
அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). Ratu என்றால் ராணி Kidul என்றால் கடல். அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி!
ஆனால் இந்தோனேசியர் எவரும் அவளைக் கடலரசி என்று தவறியும் வேறேதும் அடைமொழியின்றிச் சொல்லிவிட மாட்டார்கள். தேவி ராத்து கிடுல், பெருமதிப்புக்குரிய தலைவி ராத்து கிடுல் (Kyai Kanjeng Ratu Kidul) என்றே மிகமிக அச்சம் கலந்த மரியாதையுடன் அவளை விளிப்பர்.
அவளே தென்கடலாம் ஹிந்துமஹாசமுத்திரத்தின் பேரரசி.
http://en.wikipedia.org/wiki/Nyai_Roro_Kidul
Ratu_kidul_1
பெருங்கடல் சூழ்ந்த தீவுக்கூட்டங்களால் ஆன நாடான (Archipelago) இந்தோநேசியாவுக்கு அவளே காவல் தேவதை. ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்.
Ratu_Kidul_deity_and_Sukarnoஇந்தோநேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்ணோ இந்தக் கடலரசியின் பெரும்பக்தர். ஜாவாவின் தென்மேற்குமுனையில் ‘ப்லாபுவான் ராத்து’ (ராணியின் துறைமுகம்) என்றோர் கடற்கரையோரச் சிற்றூர் இருக்கிறது [ Pelabuhan_Ratu ] இது இந்தக்கடலரசி வந்து ஓய்வெடுக்கும் இடம் என்பது ஜாவானியரின் தொன்னாள் நம்பிக்கை. இங்குதான் அதிபர் சுகர்ணோ ஒரு வாதாமரத்தின் கீழ் கடலரசியின் பல சக்திகள் கைவரப் பெற்றதாய்ச் சொல்வர். அதே இடத்தில் கடற்கரையோரம் ஒரு பிரம்மாண்டமான எட்டடுக்கு மாளிகை ஹோட்டல் (Samudra Beach Hotel) ஒன்றையும் சுகர்ணோவே கட்டி எழுப்பினார்.
இன்றும் இந்த ஹோட்டலில் ஓர் அறை (அறை எண் 308) இந்தக் கடலரசிக்கென்று பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்டு தினமும் பகலில் தேவிக்குப் பலவித பூஜைகள் செய்யப்பட்டு இரவில் பூட்டப்பட்டுவிடும். அவள் இரவில் வந்து போகும் அடையாளங்கள் இருப்பதை அங்கே பூஜை செய்வோர் நான் போயிருந்தபோது சுட்டிக் காட்டினர். அங்கே சில மணித்துளிகள் விசேட அனுமதி பெற்றுத் தொழுது வந்தேன்.
இந்த அறை குறித்து விவரமாய் வலையில் தேடிப் படிக்கலாம். மாதிரிக்கு ஒன்று இங்கே.
Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java
Samudra Beach Hotel, Pelabuhan Ratu, West Java
இந்தப்பகுதியில் ஆண்டுக்கொருமுறை ஏப்ரல் மாதத்தில் மீனவமக்கள் வந்து கூடி இரண்டு நாள் இந்தக் கடலரசிக்குத் திருவிழா கொண்டாடுவது வழக்கம். எந்த எதிர்ப்பு வந்தாலும் கடலன்னைக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவை யாரும் தடுக்க முடியாது. இதை விமர்சிக்க முயல்வோரே பேராபத்துகளில் சிக்கிக்கொள்ளும் கதைகள் இருப்பதால் இன்றுவரை இது தொடர்கிறது.
வரும் ஏப்ரலில் கொண்டாடப்பட இருக்கும் இந்த விழாகுறித்த அரசறிக்கை:

Sea offerings ceremony in Pelabuhan Ratu

Ratu_kidul_2பண்டுநாள்முதல் இவளின் காட்சி கிட்டிய ஜாவானியர் இவளை இடையில் மணியொளி வீசும் மேகலை அணிந்த தெய்வமாகவே வர்ணிக்கின்றனர். அதுபோலவே இவளை வரைந்திருப்பதை எல்லாப் படங்களிலும் காணலாம்.
இன்றும் இந்தக் கடலரசியின் உள்ளூர்க்கதைகள் பல பலவிதங்களில் பாடப்படுகின்றன. அவற்றில் குறிப்பாய் நம் காப்பியத்தில் காணும் வண்ணமே வேண்டியபடி உருமாறவல்ல, எங்கும் மனோவேகத்தில் பறக்கவல்ல இவள் வல்லமைகளே புகழ்ந்து பாடப்படுவன. இவளின் தமிழகத் தொடர்புகள் இன்று அறுந்து விட்டாலும் இவளே மணிமேகலா தெய்வம் என்பதில் எனக்கு ஐயமில்லை.
தென்பெருங்கடலின் பேரரசி மணிமேகலையின் கதையை எழுத அருள்புரிந்த தருமமாநகரத்தின் கடைசி மாமன்னன் ப்ரபு சிலிவாங்கியின் (Prabu Siliwangi) திருப்பாதங்களை வணங்கி முடிக்கிறேன்.

சனி, 26 ஏப்ரல், 2014

மணிமேகலையின் ஜாவா – 1


(1)
manimekalai_1ணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது.
’மணிபல்லவத்திடை
மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிர் உயச்
சாவகத்து உதித்தனன்’
முற்பிறவியில் தென்மதுரையில் பிறந்து சிந்தாதேவி தந்த அமுதசுரபியென்னும் பாத்திரம் பெற்றுப் பலவுயிர்களைக் காத்துப்பின் மணிபல்லவமெனும் தீவில் இறக்கும் ஆபுத்திரன் பின்பு சாவக நாட்டுள்ள நாகபுரத்தில் உலகுய்ய வேண்டிப் பிறக்கிறான்.
புகார் நகரில் நடக்கும் இந்திரவிழாவைக் காண வரும் மணிமேகலா என்ற தேவதை மணிமேகலையை தூக்கிச் சென்று மணிபல்லவத்தீவில் விட அங்கு தீவதிலகை எனும் தேவதையின் அருளால் முற்பிறவியில் ஆபுத்திரன் கையில் இருந்த அன்னம் குன்றாத அமுதசுரபி மணிமேகலைக்குக் கிட்ட பின்னர் ஊர் திரும்பிச் சென்று அவள் பலரின் பசிப்பிணி தீர்ப்பதாய்ச் சொல்லும் அந்தக்காப்பியம்.
பின்னர் அறவண அடிகளின் மூலம் ஆபுத்திரன் ஜாவாவில் பிறந்திருப்பதை அறிந்து அவனைத் தேடி அங்கு பறந்து வருகிறாள் மணிமேகலை.
நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் தங்கியிருக்க அங்குவந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்.
பூமிசந்திரன் என்ற மன்னனுக்கு மகனாய் புண்ணியராசன் என்று இப்பிறவியில் சாவகத்தின் அரசகுமாரனாய் இருக்கும் ஆபுத்திரனை அவன் முற்பிறவிக் கதையைத் தெரிந்து கொள்ளுமாறு மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்று பின்னர் மணிமேகலை அவனுக்கு அறவழியைப் போதித்துச் செல்வதாய்ச் சொல்கிறது அக்காப்பியம்.
இப்படித் தெளிவுபட தமிழகத்துக்கும் இன்று ஜாவா என்று வழங்கப்படும் சாவகத்துக்கும் மணிமேகலை காலத்திலிருந்து இருக்கும் தொடர்புகள் குறித்து முறைப்படி ஆய்வுகள் நடந்துள்ளனவா என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சும்.
முதலில் மணிமேகலையின் காலம் எது என்றே பல்வேறு குழப்பங்கள். சிலப்பதிகாரம் பொ.ச. 2’ம் நூற்றாண்டின் இறுதியில் நடப்பதாய்க் கொண்டால் அதன் தொடர்ச்சியான மணிமேகலை?
தமிழ் விக்கிபீடியாவில் காமெடிப்பக்கம் ஒன்று சொல்வது:
//ஆகவே, மணிமேகலை காப்பியமானது பொது சகாப்தம் 1457ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க முடியாது.//
(2)
மணிமேகலையின் காலம் பொது சகாப்தம் 2’ம் நூற்றாண்டு வாக்கிலேயே இருக்கும் என்று அருமையான ஆய்வுக் கட்டுரை ஒன்றை மயிலை சீனி.வெங்கடசாமி எழுதியுள்ளார்.
அந்த நீண்ட கட்டுரையிலிருந்து இத்திறக்கில் தொடர்புடைய பகுதியை மட்டும் பார்ப்போம்:
// சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது.
‘சாவகம்’ என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி. 400 இல் சென்ற ‘பாஹியன்’ (Fa-Hien) என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற ‘இத்-ஸிங்’ (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும், இத்ஸிங் என்பவரும் அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.
இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R. இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்:
முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.
இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும்.
மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும்.
இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது.
பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார் //
ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.
மயிலையார் இந்த ஆய்வை மேற்கொண்ட காலத்தில் சில உண்மைகள் வெளிவரவில்லை. எனவேதான் பிற சான்றுகள் வலுவாயிருப்பினும் இதில் மட்டும் சற்றே உறுதிப்படாமல் எழுதியுள்ளார். மணிமேகலையின் ஜாவானியத் தொடர்புகளை ஐயந்திரிபற நிறுவும் ஆதாரங்களை இனிக் காண்போம்.
java_naga_hill
நாகமலையின் வழியே செல்லும் பாதை. இந்தப் படம் நாகபுரத்தையும், தருமசாவகன் சோலையையும் தேடிப்போகையில் எடுத்தது
(3)
ஜாவா என்ற பெயரே இந்தியர் வைத்த பெயர்தான்.
யாவாத்வீபா என்ற சங்கதப்பெயரிலிருந்து மருவி தமிழில் சாவகம் ஆனது. உலகின் தொன்மையான உணவுப்பயிர்களில் ஒன்றான பார்லிப்பயிர் செழித்திருந்த தீவு என்பதால் அப்பெயர்.
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/tamil/recherche
32 yava 3 m. barley (in the earliest times , prob. any grain or corn yielding flour or meal ; pl. barley-corns) RV. ; a barley-corn (either as a measure of length = 1/6 or 1/8 of an An3gula VarBr2S. ; or as a weight= 6 or 12 mustard seeds= 1/2 Gun5ja1 Mn. Ya1jn5.) ; any grain of seed or seed corn Bhpr. ; (in palmistry) a figure or mark on the hand resembling a barley-corn (supposed to indicate good fortune) VarBr2S.
35 yavadvIpa m. the island Yava R. (v.l. %{jala-d-}) Buddh.
யாவத்வீபம் என்ற பெயர் ஜாவா நெடுக பல பண்டைய அரசுகளின் கல்வெட்டுகளில் கிட்டுகிறது. காட்டாய் ஒன்று  (விக்கிபீடியாவிலிருந்து):
The Canggal inscription was discovered in Canggal village, Southwest from the town of Magelang. This inscription was written in Pallava letters and in Sanskrit, and tells about the erection of a linga (symbol of Shiva) on the hill in Kunjarakunja area. This area is located at a noble island called Yawadwipa (Java) which is blessed with abundance of rice and gold. This inscription tells that Yawadwipa was reigned by King Sanna, whose long period of reign was marked with wisdom and virtue.
பாரதத்துடன் ஜாவானியத் தொடர்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பதை வால்மீகி ராமாயணம் தொடங்கி (சுக்ரீவன் சீதையைத் தேடி நால்திசையிலும் வானரசேனையை அனுப்புகையில் யாவாத்வீபத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது) பிற நூலாதாரங்களின் மூலமும் அறியலாம். மதுரைக்காஞ்சியிலும், சிலப்பதிகாரத்திலும் சாவகர் பற்றிய குறிப்பிருக்கிறது.
உலகின் மாபெரும் இந்து ஆலய வளாகங்களில் ஒன்றான ப்ரம்பனான் - (Prambanan) மத்திய ஜாவாவில் உள்ளது.
உலகின் மாபெரும் இந்து ஆலய வளாகங்களில் ஒன்றான ப்ரம்பனான் – (Prambanan) மத்திய ஜாவாவில் உள்ளது.
மிக முக்கியமான தாலமியின் குறிப்பு  இங்கே:
Ptolemy, the astronomer of Alexandria who wrote his geography about the middle of the 2nd century A. D, refers to Java as Jabadieu (Yavadvipa) a name which he himself translates as the island of barley. Thus the Sanskrit name of the island was already known to foreigners. Chinese chronicles mention that about 132 A. D.
Tiao Picn (Deva Varman ?), the king of Ye-tiao (Yavadvipa), sent an embassy to China. The Emperor presented to Tiao Pien a seal of gold and a violot ribbon.
According to Ye Tiao, in Yavadvipa the first Chinese contact with a Hinduized Java occurred as early as 132 A.D. On the basis of the above document, G. Ferrand, in a 1919 issue of Journal Asiatique, stated that “Indonesia’s first contact with Hinduism must have occurred before the Christian Era”.
**Indian navigators were highly active in this region from before the Christian Era. They became even more active in the second and third centuries.**
வங்கம் என்னும் பாய்மரக்கப்பல் மூலம் கடல்வழிப் போக்குவரத்து தமிழகத்துக்கும் ஜாவாவுக்கும் இருந்தது என்று மணிமேகலையிலேயே குறிப்பிருக்கிறது:
‘ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
“சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!” என்றலும்
“அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து” என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்’
(4)
மேற்சொன்ன ஆதாரங்களைக் கொண்டு வால்மீகி ராமாயண காலத்திலிருந்து யாவாத்வீபம் என்ற ஜாவாத்தீவே சாவகம் என்று கண்டோம்.
ஆனால் பொதுயுகம் (CE – Common Era) இரண்டாம் நூற்றாண்டில் அங்கு பௌத்தம் பரவியிருந்தமைக்கு ஆதாரம் இல்லையென்று பலர் சொல்வதற்குக் காரணம் மயிலயார் காலத்தில் சரியான சான்றுகள் கிட்டியிருக்கவில்லை என்பதால். ஆபுத்திரன் மறுபிறவி எடுத்தது சுமத்திராவிலா அல்லது போர்னியோவிலா என்றுகூடத் தேடியிருந்தனர்.
சாவகத்தீவில் 2’ம் நூற்றாண்டில் பௌத்தம் இருந்ததில்லை என்ற வாதம் 1997’ல் தெரியவந்த ஒரு முக்கிய ஆதாரத்தில் முழுமையாய் அடிபட்டுப் போனது.
அச்சமயம் நான் ஜாவாவில் இருந்தேன்.
மேற்குஜாவாவில் ’Batujaya’ என்ற இடத்தில் புராதனமான கோயில்நகரம் ஒன்று 1984’ல் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் பல சிதிலமான ஆலயங்கள். கார்பன் டேட்டிங்கில் 2’ம் நூற்றாண்டுக்கு முந்தையவை என்றும் கண்டனர். குறிப்பாய் ‘Candi Jiwa’ என்ற காம்ப்லெக்ஸ் மட்டும் சற்றே வித்தியாசமாய் பௌத்தத்துடன் தொடர்புடையதெனத் தெரியவர உடன் அங்கு சென்றிருந்தேன்.

ஆம். சிதாரும் என்ற மேற்குஜாவாவின் நதிக்கரையில் அமைந்திருந்த அந்த சண்டி ஜீவா பௌத்த பாணியில் அமைந்திருந்தது.
மேலும் விவரம் தேவையென்றால் கூகிளில் கிடைக்கும்.
http://en.wikipedia.org/wiki/Batujaya_Archaeological_Site
Batujaya is an archeological site located in the village of Batujaya, Karawang in West Java, Indonesia. The site is five square kilometers in area and comprises more than 20 structural remains buried in what Sundanese call hunyur or unur (high mounds of earth consisting of artifacts). Unur is similar to the manapo found at the Muara Jambi archaeological site.
The site was first found and examined by archaeologists from the University of Indonesia in 1984. Excavations have since uncovered 17 unur, of which three are in the form of pools. The structures found are made of bricks composed of a mixtures of clay and rice husks, not volcanic rock which is difficult to find in Batujaya. Two structures recovered are in the form of temples, one of which, known as Jiwa Temple, has been restored. According to Dr Tony Djubiantono, the head of Bandung Archeology Agency, Jiwa was built in the 2nd century.
Candi Jiwa @ Batujaya, West Java, Indonesia
Candi Jiwa @ Batujaya, West Java, Indonesia
மேலும் புகைப்படங்கள் இங்கே  http://www.panoramio.com/photo/34743335
//AREA of SITUS SEGARAN BATUJAYA Blandongan Temple and Jiwa is 2 temple among 24 ” UNUR” ( local resident call to situs) ( Year data 2006),this temple finish restoration in 2010. This Situs spread over to cover in 2 countryside, that is Countryside of Segaran, District of Batujaya and Countryside of Telagajaya, District of Pakisjaya Seen from its for temples here have religion background of Buddha. Pursuant to analysis of carbon dating ( C14 ) indicating that culture here started at century second. //
(5)
மேற்குஜாவாவில் இந்த வளாகத்தைக் கண்டுவந்த நாள்முதலாய் என் தேடல் தீவிரமானது.
மணிமேகலையில் சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன்.
நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்.
முதலில் அந்தக் காப்பியத்தின் நாயகி மணிமேகலையின் பெயர் எங்கும் இதுவரை கிட்டவில்லை. மேலும் மணிமேகலை மந்திரசக்தியால் ககனமார்க்கமாய் அங்கு சென்றிறங்கி ஆபுத்திரனைச் சந்தித்துவிட்டுச் சின்னாளில் தமிழகம் திரும்பிச் சென்று விடுவதால் ஜாவானியர்களுக்கு அவள் வரலாறு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்து பிற சான்றுகளைத் தொடர்ந்தேன்.
அடுத்து ஆபுத்திரன். அவன் முன்கதை சுருக்கமாய்:
ஆபுத்திரன்
ஆபுத்திரன்
எங்கோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்மதுரையில் பிறந்து கன்னியாகுமரியில் பசுவொன்றின் பராமரிப்பில் அனாதையாய்த் தாய் விட்டுச் செல்ல மறையவர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்துவர சில கசப்பான சம்பவங்களால் வீட்டைவிட்டு வெளியேறி மதுரைக்கு வந்து ஊரம்பலத்தில் தங்கி பிச்சையெடுத்து அதை வறியவர்க்கும் வழங்கிப் பின்னர் சிந்தாதேவியெனும் வாணியின் அருளால் அவன் கைவரும் அமுதசுரபியால் அள்ள அள்ளக் குறையாத அன்னம் பெருகிவர மதுரையில் வறுமையை அறவே போக்கிய அருளாளன் ஒரு கட்டத்தில் ஆபுத்திரன் சாவகத்துக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது.
உலகியற்கைக்கு முரணாய் ஆபுத்திரன் வழங்கியிருந்த இலவச உணவுத்திட்டம் கண்டு பொறுக்காத இந்திரன் மழைவளைத்தைப் பெருக்கி தக்கணமதுரையில் பஞ்சமே இல்லாது செய்ய ஆபுத்திரன் கடிஞை பயனற்றுப் போகிறது. அந்த நேரத்தில் சாவகத்திலிருந்து திரைகடலோடி வந்தோர் அத்தீவில் மழை பொய்த்துப் பசிப்பிணி சூழ்ந்திருப்பதாய்ச் சொல்ல அதைத் தீர்க்கும் பேராவலில் வங்கமொன்றில் ஏறி சாவகம் நோக்கிப் பயணிக்கிறான் ஆபுத்திரன்.
வழியில் புயலில் சிக்கிய வங்கத்தின் பாய்மரம் கிழிய மணிபல்லவத்தீவில் தங்க நேரிடுகிறது. அவனைத் தவறுதலாய் அத்தீவிலேயே கப்பல் விட்டுச் செல்ல அங்கேயே அமுதசுரபியைத் தக்கோர் வரும் நாளில் அவர் கையில் கிட்டுமாறு தீவதிலகையெனும் தேவதையிடம் வேண்டிக்கொண்டு உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கிறான் ஆபுத்திரன்.
சாவகம் செல்லும் இச்சை கொண்டு உயிர் துறந்தமையால் அங்கேயே மறுபிறவி எடுக்கிறான். ஆவின்பால் அன்புகொண்ட ஆபுத்திரன் அங்கே ஒரு பசுவிடமே தோன்றுவதாய்ச் சொல்லும் மணிமேகலை. பிள்ளையில்லாத ஜாவானிய மன்னன் பூமிசந்திரன் அவனைத் தத்தெடுத்து வளர்க்கிறான்.
ஆபுத்திரன் தன் முற்பிறவிக்கதையை மணிமேகலை தேடிவந்து நினைவூட்டியபடி மேற்கு ஜாவாவில் நல்லாட்சி செய்து மக்கள் பசி தீர்த்திருக்க வேண்டும்.
எனவேதான் ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர். Aputra Indonesia என்று வலையில் தேடிப்பாருங்கள். அதே போல் Bumi Candra (Chandra இல்லை) என்ற பெயரும் சுந்தானிய மக்களிடை வைத்திருக்கக் கண்டேன். நான் தேடியவரை ஆபுத்திரன் கதை எனக்குக் கிட்டவில்லை. ஜாவானிய அரசபரம்பரை வந்தோர் ரகசியமாய்க் காத்திருப்பதாய்ச் சொல்லப்படும் லோந்தார் (Lontar) என்ற பழஞ்சுவடிகளில் மறைந்திருக்கலாம்.
தருமசாவகனைத் தேடும்போதுதான் ஆச்சர்யம் காத்திருந்தது.
(தொடரும்)
சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் நீ களைவாய்!
(மணிமேகலையில் ஆபுத்திரன் மதுரை அம்பலத்தில் வாணியைத் தொழுதேத்தும் பாடல்)
கையில் அட்சய பாத்திரத்துடன் ஜாவானிய சரஸ்வதி
கையில் அட்சய பாத்திரத்துடன் ஜாவானிய சரஸ்வதி

வியாழன், 24 ஏப்ரல், 2014

மஹேந்திர பல்லவன் கலப்பு ஜாதியா ?


ஆராய்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் விபரீதமாகப் பண்ணியிருக்கிறார்கள் என்பதற்கு ஒன்று சொல்கிறேன்;மஹேந்திர வர்மாவுக்கு அநேகப் பட்டப் பெயர்கள் உண்டு. அதில் 'ஸங்கீர்ண ஜாதி'என்று ஒன்று. அப்படியென்றால் 'கலப்பு ஜாதி'. இந்த நேர் அர்த்தத்தை வைத்துக் கொண்டு நான் சொல்கிற ஆராய்ச்சியாளர்கள் என்ன பண்ணினார்களென்றால் 'மஹேந்திர வர்மா சுத்த க்ஷத்திரியரில்லை;கலப்பு ஜாதியில் பிறந்தவன் அதில் பெருமையும் பட்டவன். அதனால் சாஸனங்களில் அவனே அப்படி பிருதம் (விருது) போட்டுக் கொண்டிருக்கிறான் என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஜாதிமுறையைப் பற்றி இன்றைக்கு என்ன அபிப்பிராயமிருந்தாலும் நம்முடைய பழைய ராஜாக்கள் மநு தர்ம சாஸ்திரப்படி வர்ணாச்ரமங்களைப் பரிபாலித்து வந்ததாகவே கல்வெட்டுகள், செப்பேடுகள், புலவர்களின் பாடல்கள் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. அப்படிப்பட்ட காலத்தில் 'பாரத்வாஜ'கோத்திரக்காரர் என்று தங்களை பெருமையோடு சொல்லிக்கொண்ட பல்லவ வம்ஸ ராஜா ஒருத்தன் தன்னைக் கலப்பு ஜாதியில் பிறந்தவன் என்பதை ஒரு பிருதமாக ஒருநாளும் போட்டுக் கொள்ள மாட்டான். இப்போது நேருவை ப்ராம்மணோத்தமர், வர்ணாச்ரம ரக்ஷகர் என்று சொன்னால் அவருக்கு எவ்வளவு கோபம் வரும்?அப்படித்தான் பதிமூன்று ஸெஞ்சுரிக்கு முன்னால் இருந்த மஹேந்த்ர வர்மாவுக்கு அவன் நிஜமாகவே கலப்பு ஜாதியாயிருந்திருந்தால்கூட அப்படிச் சொன்னால் கோபம்தான் வரும். அவன் எழுதியுள்ள மத்த விலாஸ ப்ரஹஸனம் என்ற ஹாஸ்ய நாடகத்தில் முடிவாக பரத வாக்யம் என்று மங்கள ஸ்லோகம் சொல்கிறபோது, ப்ரஜைகளின் க்ஷேமத்திற்காக அக்னி பகவான் ஆஹ§திகளை தேவர்களுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துக் கொண்டிருக்கட்டும். அதாவது, என் ராஜ்யத்தில் யாக யஜ்ஞங்கள் நடந்து கொண்டிருக்கட்டும். ப்ராம்மணர்கள் வேதத்தை நன்றாக அப்யாஸம் பண்ணிக் கொண்டிருக்கட்டும். பசுக்கள் பாலைப் பொழிந்து கொண்டிருக்கட்டும் என்கிறான். க்ஷீர ஸ்ம்ருத்தியை (பால் செழிப்பைச் சொல்வதும் அக்னி ஹோத்திரத்துக்கு அது பிரயோஜனப் படுவதால்தான். கோ ப்ராஹ்மணேப்யோ என்றும் அந்தணர் (வானவர்) ஆனினம் என்று சேர்த்துச் சொல்வது அவர்களிடம் மட்டும் பக்ஷபாதத்தினால் அல்ல!ப்ராம்மணன், பசு இரண்டும் யாகத்திற்கு அவசியமாயிருப்பதால் அப்படிச் சொல்வது. இப்படி வைதிக ஆசரணைகளைப் போற்றியவன் தன்னை ஸங்கர (கலப்பு) ஜாதிக்காரன் என்று டைட்டில் போட்டுக் கொண்டிருக்கவே மாட்டான்.
பின்னே ஸங்கீர்ண ஜாதி என்றால் என்ன?புரியாமல் கஷ்டப்படுத்திற்று. அப்புறம் ஸங்கீத ஆராய்ச்சிக்காரர்கள் புரிய வைத்தார்கள்.
மஹேந்திர வர்மா ஸங்கீதத்தில் மஹா நிபுணானாயிருந்து புதுக்கோட்டை கிட்ட குடுமியா மலையில் ஸங்கீத விஷயமாக புதிய கல்வெட்டு, லோகத்திலேயே அதுமாதிரி ஒன்று இல்லை என்னும்படிப் பொறித்து வைத்தவன். அதனால் ஸங்கீத ஆராய்ச்சிக்காரர்கள் இந்த டைட்டிலுக்கு ஸங்கீத சாஸ்திரத்தை வைத்து அர்த்தம் பண்ணினார்கள். தாளங்களில் கலப்பு வகையாக ஸங்கீர்ண ஜாதி என்று ஒன்று உண்டு. அதில் கெட்டிக்காரனாக, அல்லது அதைக் கண்டு பிடித்தவனாக அவன் இருந்திருப்பான். அதனால் அப்படி டைட்டில் என்று சொன்னார்கள். எனக்கும் ஆறுதலாக இருந்தது. சாஸ்த்திராபிமானமுள்ள ஒரு ராஜா தன்னைக் கலப்பு ஜாதிக்காரனென்று டைட்டிலே போட்டுக் கொண்டு ப்ரகடனப்படுத்தினான் என்கிறார்களே என்று வருத்தப்பட்டது ஸமாதானமாயிற்று.
அப்புறம் அந்த ஸமாதானம் மறுபடி குலைத்து போயிற்று. ஸங்கீத ரிஸர்ச்காரர்களிலேயே சில பேர் இன்னும் ஆழமாகப் பார்த்து ஸங்கீர்ண ஜாதித் தாளம் தற்போது இருக்கிற தாள முறையில் வருவதே. இந்த முறை தோன்றி 500 வருஷத்துக்குள்தான் ஆகிறது. 1300 வருஷம் முந்தி இருந்த மஹேந்த்ர வர்மா அதை ஒருகாலும் குறிப்பிட்டிருக்க முடியாது என்று நிறைய ஆதாரம் காட்டிச் சொன்னார்கள்.
இதென்னடா?என்று மறுபடி விசாரமாயிற்று.
மஹேந்திர வர்மா ரொம்ப வேடிக்கைப் பிரியன், witty .தன்னை பரிஹாஸம் பண்ணிக் கொள்கிற மாதிரிக்கூட டைட்டில்கள் போட்டுக்கொண்டவன். அதற்கேற்ற, விநோதமாக, பல தினுஸாக இருக்கறதுதான் தன் ஸ்வபாவம் என்று தெரிவிப்பதற்காக 'விசித்ர சித்தன்'என்றே ஒரு பிருதம் போட்டும் கொண்டவன். இன்னொரு பக்கம் இஷ்ட-துஷ்ட-ப்ரஷ்ட சரிதன் என்றும் போட்டுக் கொண்டிருக்கிறான்.
இஷ்ட சரிதன் ஸரி. எல்லோரும் இஷ்டப்படும் படியான நடத்தை உள்ளவனென்று அதற்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். சத்ருக்களிடமும், குற்றவாளிகளிடமும் ரொம்பக் கடுமையாக இருப்பவன் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ப்ரஷ்ட சரிதன் என்பதை எப்படி நல்லதாக அர்த்தம் பண்ணுவது?ஆனாலும் அதையும் டைட்டிலில் சேர்த்துக் கொண்டிருக்கிறான். வாஸ்தவத்தில் அவன் சரித்திரத்தைப் பார்த்தால் 'பிரஷ்டன்'என்னும்படி எதுவுமே இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே நம்மை மட்டமும் தட்டிக் கொள்வோமே!பட்டங்கள் உயர்வாகப் போட்டுக் கொள்வது எல்லா ராஜாக்களும் செய்வதுதான். நாம் அவர்களில் ஒருத்தனாக இல்லாமல் unique ஆக இருக்கிற விசித்ர சித்தன் அல்லவா?அதனால் மட்டந்தட்டிக் கொண்டும் சிலது போட்டுக் கொள்வோம் என்று பண்ணினது போல இருக்கிற விசித்திர சித்தன் அல்லவா?அதனால் மட்டந்தட்டிக் கொண்டும் சிலது போட்டுக் கொள்வோம் என்று பண்ணுனது போல இருக்கிறது. ராஜா என்றால் இல்லாத உசத்தியெல்லாம் கற்பித்து நிறையப் பட்டம் போட்டுக் கொள்வது என்று வழக்கமாயிருந்தால், தானும் அப்படிப் போட்டுக் கொண்டபோதே, அந்த வழக்கத்தை parody -யும், அதாவது நையாண்டியும், செய்கிற விதத்தில் இப்படி மட்டமான விஷயத்தையும் போலிருக்கிறது. நையாண்டி பண்ணுவதில் அவன் எத்தனை சதுரன் என்பதற்கு அவன் எழுதின மத்த விலாஸம் என்ற ப்ரஹனதத்தை அதாவது farce என்கிறார்களே, அப்படிப்பட்ட கேலி நாடகத்தைப் பார்த்தாலே போதும். அந்த மனப்போக்கில்தான் அவன் மற்ற ராஜாக்களெல்லாம் தங்கள் வம்ஸத்தைப் பற்றி ஆஹா, ஊஹ¨ என்று சொல்லிக்கொண்டு, தாங்களே அப்பேர்ப்பட்ட வம்ஸத்தின் சூடாமணி, தினமணி, சிந்தாமணி என்றெல்லாம் பட்டம் போட்டுக் கொள்கிற வழக்கத்தைக் கேலி பண்ணி, நான் கலப்பு ஜாதி என்று இல்லாததைச் சொல்லி ஒரு டைட்டில் போட்டுக் கொண்டான் போலிருக்கிறது. என்று ஒரு மாதிரி என்னை ஸமாதானப் படுத்திக் கொள்ளப் பார்த்தேன். ஆனாலும் முழுக்க முழுக்க ஸமாதானமாகவில்லை.
வர்ணாச்ரம விபாகங்கள் (பிரிவினைகள்) இல்லாத ஜைன மதத்தைத்தான் முதலில் அவன் தழுவியிருந்தான். அப்பர் ஸ்வாமிகளும் நடுவில் சில காலம் அந்த மதந்திலிருந்துவிட்டு அப்புறம் வைதிக மதத்துக்குத் திரும்பினவர் தான். அதற்காக அவன் படாத பாடு படுத்திவிட்டு, அது ஒன்றும் அவனைத் தொடவில்லை என்று அற்புதங்களுக்கு மேலே அற்புதமாகப் பார்த்துவிட்டு, அப்புறம் தானே வைதிக மதத்தைத் தழுவி விட்டான். இப்படிப்பட்ட புது கன்வெர்ட்கள்தான் எப்போதும் தீவிரமாயிருப்பது. அப்படியிருக்க இவன் நையாண்டியாகக்கூடத் தன்னை "ஸங்கீர்ண ஜாதிக்கார" னாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போயிருப்பானா என்ற கேள்வி தோன்றிக் கொண்டேயிருந்தது. 'பிரஷ்டன்'என்று சொல்லிக் கொண்டதுகூட ஒரு காலத்தில் தான் 'வேத பாஹ்யனாக' (வேத வழிக்குப் புறம்பாக) வேறு மதத்தில் இருந்ததை 'ஹின்ட்'பண்ணுவதற்கும் இருக்கலாம். ஸங்கீர்ண ஜாதிக்கு அடிப்படைக் கூடக் காரணம் காட்டுவதற்கில்லலையே என்று யோஜித்துக்
கொண்டிருந்தேன்.
முடிவாக, புதிருக்கு 'ஸொல்யூஷனும்'பிற்பாடு கிடைத்தது. ஸங்கீத ஆராய்ச்சிக்காரர்களேதான் நன்றாக அலசிப் பார்த்து இப்படி தீர்மானமாக 'ஸால்வ்'பண்ணிக் கொடுத்தார்கள். என்ன சொன்னார்களென்றால்,
'ஸங்கீர்ண ஜாதி'என்பதில் ஜாதி என்று வருவது ராகத்தைக் குறிப்பதே தவிர, caste -ஐ இல்லை என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். பரத சாஸ்திரத்திலேயே ராகம் என்ற
பெயரில்லை. ஜாதி என்றுதான் இருக்கிறது. மஹேந்திர வர்மாவுக்கு சுமார் நூறு வருஷம் முன்னாலிருந்த 'மதங்கர்தான் ராகம்'என்ற பெயரைக் கொண்டுவந்தார். அவருக்கப்புறமும் கொஞ்ச காலம் பழைய பேர் எடுபட்டுப் போகாமல் இரண்டு பேரும் வழங்கி வந்திருக்கிறது. மதங்கர் ராகங்களில் ஸங்கீர்ணம் என்கிற ஒரு கலப்பு தினுஸைக் கொல்லியிருக்கிறார். மஹேந்திர வர்மா இப்படிப்பட்ட கலப்பு ராகங்களை ஸ்ருஷ்டி பண்ணுவதில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்தானென்று அவனுடைய 'குடுமியாமலைக் கல்வெட்டில்'கொடுத்துள்ள 'ஸ்கேல்' (ஸ்வரக்கிரமம்) களிலிருந்து நிரூபணமாகிறது. அதை வைத்துத்தான் 'ஸங்கீர்ண ஜாதி'என்று பட்டம் பேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற ஆராய்ச்சிக்கு சுபமான முடிவு கட்டினார்கள்.
ஸங்கீர்ண ஜாதி அதாவது கலப்பு ராகம் என்னவென்று அவர்கள் காட்டியிருப்பதில் எனக்கு புரிந்த மாட்டில் சொல்கிறேன். இப்போது மேள (கர்த்தா) ராகம் என்று எழுபத்திரண்டை வைத்து, அவற்றிலிருந்தே பாக்கி அத்தனை ராகங்களும் வந்திருப்பதாக 'க்ளாஸிஃபை'செய்திருக்கிறார்கள். அந்த 72 ராகங்களை இரண்டு பெரிய டிவிஷன்களாகப் பிரித்திருக்கிறது. ஸப்த ஸ்வரங்களில் நடுவவே வரும் 'ம'வில் இரண்டு தினுஸு இரண்டில் தாழக்க (தாழ்வாக) இருப்பது சுத்த மத்யமம் - சங்கராபரணத்தில் வருகிற 'ம' (த்யமம்) தூக்கலாக இருப்பது ப்ரதி மத்யமம் கல்யாணியில் வருவது. இப்படி இரண்டு விதமாக உள்ள மத்யம வித்யாஸத்தை வைத்தே 72 மேளங்களை சுத்த மத்யம ராகங்கள் 36, ப்ரதி மத்யம ராகங்கள் 36 என்று இரண்டு டிவிஷன்களாகப் பண்ணியிருப்பது. கர்நாடக சங்கீதம் இப்போது இருக்கிற முறைகளிலும் சரி, அதற்கு ஆதாரமாகத் தேவார காலம் முதலானவற்றிலிருந்த தமிழ்ப் பண்களின் முறைபாட்டிலும் சரி. எந்த ஒரு ராகத்திலும் இரண்டு மத்யமங்களும் வராது. 'ம'மாதிரியே 'ரி','க','த','நி'ஆகிய ஸ்வரங்களிலும் ஒவ்வொன்றிலும் இரண்டு வகை உண்டு. இவற்றிலே ஒரு ராகத்தின் ஆரோஹணத்தில் (ஏறு வரிசையில்) ஏதோ ஒரு வகையான 'ரி','க','த','நி'வரும் ராகங்கள் அநேகமிருக்கின்றன. ஆனால் நம்முடைய தக்ஷிண தேச ஸங்கீதத்தில் வரும் ராகங்களில் மத்யமத்தில் மட்டும் வித்யாஸமில்லாமல், (ஏறு வரிசையில்) போகும்போதும் (இறங்கு வரிசையில்) வரும் போதும் ஒரே 'ம'தான் வரும். ஒரு ராகமென்றால் அது ஒன்று சுத்த மத்யம ராகமாக இருக்கும். இரண்டும் கலந்த ராகம் - அதாவது மத்யமத்தில்¢ 'ஸங்கீர்ண'மாக இருக்கிற ஜாதி கிடையாது.
ஆனால் இப்படிப்பட்ட இரட்டை மத்யம ராகங்களையும் மஹேந்திர வர்மா ஸ்ருஷ்டித்திருக்கிறான். அவன் கல்வெட்டில் கொடுத்திருக்கிற ஏழு ராகங்களிலுமே இரண்டு மத்யமங்களும் வருகின்றனவாம். அதனால்தான் அவனுக்கே ஸங்கீர்ண ஜாதி என்று பட்டப் பேர்.
அவனுடைய 'ஸங்கீக'வழியை அப்புறமும் தக்ஷிணத்தில் பின்பற்றவில்லை. ஹிந்துஸ்தானி ஸங்கீதத்தில்தான் இரண்டு மத்யமங்களும் வரும் ராகங்கள் இருக்கிறனவென்றும், அவை ரொம்பவும் 'ரஞ்ஜக'மாக இருப்பதால் பிற்காலத்தில் நம்முடைய ஸாஹித்ய கர்த்தாக்களும் வித்வான்களும்கூட அப்படிப்பட்ட வடக்கத்தி ராகங்களில் சிலதை எடுத்துக் கொண்டிருக்கிறார்களென்றும் தெரிந்து கொண்டேன்.
ஆராய்ச்சி என்ற பெயரில் நவநாகரீகக் கொள்கைகளைப் பூர்விகர்கள் மேல் அபிப்ராயத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது கலப்பு மனம் உயர்ந்த
விஷயமாக சில பேருக்கு இருப்பதால் என்றைக்கோ இருந்த மஹேந்திரவர்மாவைக் கலப்பு ஜாதிக்காரர்களாகியதாகச் சொன்னேன். இப்படி ஒன்றுதான் அவனுடைய பிள்ளைக்கு ஸேநாதிபதியாயிருந்த மாமாத்திரப் பரஞ்ஜோதியை இன்றைக்குச் சில பேருக்குத் தனித் தமிழ்ப் பாரம்பர்யம் காட்டுவதில் ஆசை இருப்பதால் தமிழ்நாட்டு வேளாளராக்கியிருப்பது.
நன்றி:காஞ்சி காம கோடி பீடம்