புதன், 26 மார்ச், 2014

பார் ஆண்ட பேரினம்



தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும்தேவநேயப் பாவாணர் எழுதியமுதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம்.
தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர்,பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

          குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம்திரு. எக்கேல்திரு. கிளேற்றர்திரு. கட்டு எலியட்திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.


1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு

2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா

3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா

4. தொலை கிழக்கில் – சீன நாடு

5. கிழக்கில் – பர்மாமலேசியாசிங்கப்பூர்

6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

          இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
          இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடுஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ்,தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும்தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும்தமிழ்ப் பண்பாட்டையும்தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
          இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம்இதுதான் ” நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம்”.
          கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இதுஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியாமடகாஸ்கர்,தென்னாப்பிரிக்காஇலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு,சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடுஏழுமுன்பலை நாடுஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடுஏழுகுனக்கரை நாடுஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி,குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடுமணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரைகபாடபுரம்முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையதுதான்.
          நக்கீரர் இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ளதென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் சிவன்,முருகர்அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல்முதுநாரைமுடுகுருக்கு,கலரியவிரைபேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்களுடன்நடத்தப்பட்டது.
          இதில், “அகத்தியம்தொல்காப்பியம்பூதபுராணம்மாபுராணம்ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றையமதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறுபுறநானூறுநாலடியார்திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
          வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றைநாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
வரலாற்றுத் தேடல் தொடரும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக