வியாழன், 25 டிசம்பர், 2014

நயினார்அகரம்


மன்னர்கள் கோயில்களை பெருமளவு கட்டுவதற்கு காரணங்கள் உண்டு. அது கடவுள் பக்தி, கட்டிட கலையை வளர்க்க, நாட்டின் செழிப்பை நிரூபிக்க என்று பல காரணங்கள் உண்டு. சில மன்னர்கள் கோயில்களைக் கட்டி பெயர் பொறித்த காரணத்தால் இன்றளவும் வரலாற்றில் இடம்பெறுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
                                           இப்படியாக கோயில்களால் நினைவூட்டப்படும் மன்னர்களில் ஒருவர் குலசேகர பாண்டியன். கி.பி 15 ஆம் நூற்றாண்டில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிற்றரசன். அகரம் என்று முடியும் ஐந்து சிற்றூர்களை ஆண்டிருக்கிறான். காலப்போக்கில் அகரம் எனும் இரண்டு ஊர்கள் அழிந்துபோயின. மீதமுள்ள மூன்று ஊர்களில் மேலகரம்இ நன்னகரம்இ நயினாரகரம் இன்றும் அதே பெயர்களைக் கொண்டுதான் அழைக்கப்படுகின்றன.
                                       சிற்றரசனாகிய குலசேகர பாண்டியன் ஆண்ட ஊர்களில் பல கோயில்களைக் கட்டிய இவன் தான் கட்டிய கோயில்களின் பெயர்களில் மட்டும் தன் பெயரைப் பொறிக்காது கடவுள் பெயர்களின் முன்னாலும் தன் பெயரை சூடினான். உதாரணமாக குலசேகர நாதர்இ குலசேகர விநாயகர்இ குலசேகர அம்மன் என்று பெயர் சூட்டினான்.
                                      குறிப்பிடத்தக்க வகையில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிற்றரசன் வைஷ்ணவ தெய்வமாகிய பெருமாள் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளான். புத்திக் கூர்மையுடன் இந்த கோயில் தெய்வத்திற்கு முதல் பெயராக தன்பெயரை சூட்டாது நீலவேணிநாத வெங்கடேசப் பெருமான் என்று பெயரை வைத்துவிட்டான். இதன்மூலம் இந்துக்களில் பாகுபாடு ஏற்படுவதை விரும்பாத மன்னன் என்று புலப்படுகிறது.
                                  இவ்வாறு தான் கட்டிய கோயில்களில் மட்டுமல்லாது கோயிலுக்கு பெயர் சூட்டிய விதத்திலும் இன்றளவும் வரலாற்றில் இடம்பெறுகிறான் இந்த குலசேகரபாண்டியன். இப்படி கோயில்கள் கட்டி வரலாற்றில் எப்படி இடம்பெறாமல் போவான்? தென்காசி காசிவிசுவநாதர் கோயிலைக் கட்டிய பேரரசன் பராக்கிரமபாண்டியனின் தம்பிதான் இந்த குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
                                   சிற்றரசன் குலசேகரபாண்டியன் ஆண்ட நயினாரகரத்தில்தான் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள கருப்பாநதி ஆற்றங்கரையில்தான் இதில் இரண்டு கோயில்களும் (குலசேகர அம்மன்இ குலசேகர விநாயர்) அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. அக்ரஹார தெருவின் மேற்கில் வைஷ்ணவ தெய்வமாகிய பெருமாள் கோயிலும் கிழக்கில் குலசேகர நாதர் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பாண்டியமன்னனின் ஆட்சியின்கீழ் வைஷ்ணவர்களும்இ சைவர்களும் ஒரே அக்ரஹாரத்தில் வாழ்ந்துவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
                                   இப்படியான பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலானது சரிவர இன்று கவனிக்கப் படுவதாய் தெரியவில்லை. நான்கு குலசேகர கோயில்களில் அம்மன் கோயில் மட்டும்தான் மக்களால் பெரிதும் வழிபடப்படுகிறது. இப்படியான பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலானது சரிவர இன்று கவனிக்கப் படுவதாய் தெரியவில்லை. நான்கு குலசேகர கோயில்களில் ஒன்றான அம்மன் கோயில் மட்டும் இவ்வூர் மக்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கோயில்கள் அனைத்தையும் இந்து அறநிலைத்துறை கண்காணிப்பில் கொண்டு புதுப்பித்தால் குலசேகர பாண்டியனின் சிறப்பு இன்னும் பல நூற்றாண்டிற்கும் நிலைத்து நிற்கும்.

நயினாரகரம் மாட்டுச்சந்தை


அழிந்து வரும் பாரம்பரியமிக்க  நயினாரகரம்  மாட்டுச்சந்தை 
           திருநெல்வேலியிலிருந்து 70 கிலோமேட்டார் துரத்தில் தென்காசி நகராட்சியில் இருக்கும் ஒரு அழகிய குக்கிராமம் நயினாரகரம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. திருநெல்வேலிக்கு அல்வா சிறப்பு என்று அனைவரும் அறிந்தது. அதுபோல நயினாரகரம் என்ற கிராமத்தின் சிறப்பு ‘சந்தை’. சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை பெற்ற அச்சந்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கே சிறப்பு என கூறலாம். தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் நயினாரகரம் சந்தையும் ஒன்று. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள அச்சந்தைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலத்தில் இருந்தும் மக்கள் வந்து பொருட்களை வாங்கியும், விற்றும் செல்வார்கள். 
               சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் கூட இங்கு பொருட்களை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் இப்பொழுது போல எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் கிடைக்கும் என்பது இல்லை. இது மாதிரி சந்தைகளில் தான் மக்கள் தங்களுக்கு தேவையானதை பண்டமாற்று செய்து கொள்வார்கள். இப்பொழுதுதான் மக்களிடம் பணம் மாற்று முறை என்ற பழக்கம் வந்துள்ளது. ஆனால் அந்த காலத்தில் ஒருவருக்கும் அரிசி வேண்டுமென்றால் அவர் தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் பருப்பு, கோதுமை இல்லை ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள். நயினாரகரம் சந்தையும் அந்த மாதிரி இயங்கி வந்தது. வாரம் ஒருமுறை பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்தவண்ணம் இருக்கும். இச்சந்தையில் கிடைக்காத பொருட்கள் கிடையாது. நமக்கு தேவையான அனைத்துமே அங்கு கிடைக்கும்.
சந்தை நடைபெறும் சனிக்கிழமை தோறும் திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்தும் போயும் இருப்பார்கள். இச்சந்தையின் மிகப்பெரிய சிறப்பு மாடுகள்.
கரவ மாடுகள், எருமை மாடு என அனைத்து வகை மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் அலைமோதுவார்கள். கேரளா, ஆந்திரா மற்றும் பிற  மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான மாடுகளை இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள். இச்சந்தையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வந்தனர். 
நாளடைவில் நாகரீகம் வளர வளர மக்களின் தரமும் உயர்ந்தது. ஆனால் இச்சந்தை தன் அழிவை நோக்கியே சென்றுக்கொண்டிருந்தது. மக்களின் தரம் உயர்ந்தது ஆங்காங்கே நமக்கு தேவையான பொருட்கள் நம் வீட்டின் அருகிலே பெற்றுக்கொள்ளும் வசதியை நாம் இப்பொழுது பெற்றுள்ளோம். முன்னர் போல் யாரும் சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குவதில்லை. தற்பொழுது இருக்கும் பொருட்கள் எதற்கும் தரமும் அவ்வளவு இல்லை. விலையும் உயர்ந்ததாக உள்ளது. ஆனால் அக்கால சந்தையில் தரத்திற்கும் ஏற்ற மிகக்குறைந்த விலையில் பொருட்களை வாங்கி மக்கள் பயனடைந்தார்கள். இப்படி பல சிறப்புக் கொண்ட அச்சந்தை தற்போது அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது  வருத்தமளிக்கிறது.
வாரம் வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை இயங்கும். அதுவும் இப்பொழுது எல்லாப் பொருட்களும் அங்கு கிடைப்பதில்லை, சனிக்கிழமை தோறும் பிற மாநிலங்களில் மாடுகளை மட்டும் கொண்டு வியாபாரம் செய்து விட்டு செல்வார்கள். இது மாதிரி சந்தை நம் காலத்தில் இல்லை என்பது நமக்கு வருத்தட்டிற்குரியது. அழிந்து வரும் இச்சந்தையின் புகழை நாம் என்றும் மறந்திட முடியாது

திங்கள், 1 செப்டம்பர், 2014

ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை !!!



ஆதித்த கரிகாலனை கொன்ற உடையார் குடி அந்தணர்களுக்கு உடையார் ஸ்ரீ ஸ்ரீ ராஜ ராஜா தேவர் அளித்த தண்டனை பற்றிய கல்வெட்டு உடையார்குடியில் உள்ளது இது தற்போதைய காட்டுமன்னார்கோவில். அந்த கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள வாசன்கங்கள் இது தான்

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம்

“பாண்டியனைத் தல
ைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர"

உடையாற்குடிகு சக்கரவர்த்தி செல்லாமல் அவரின் ஸ்ரீமுகம் மட்டும் அனுப்பி தண்டனை நிறைவேற்ற சொல்கிறார் இதன் கருத்து "வீர நாராயணன் சதுர்வேதி மங்கலத்து பெருமக்களுக்கு சகரவர்தியில் ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன் இவன் தம்பி
ரவிதாஸன, பஞ்சவன், பரஹ்மாதிராஜனும் இவன் தம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும், பிள்ளைகளும் இவர்களுக்கு பெண் கொடுத்தவர்களும் பெண்களும் இவர்கள் சமப்தபட்ட அனைவரும் அவர்களின் உடைமைகள் சொத்து அனைத்தையும் விட்டு விட்டு உடனே இந்த ஊரை காலிசெய்து வெளியேறவேண்டும் என்று பொருளில் எழுதப்பட்ட கல்வெட்டு

செவ்வாய், 1 ஜூலை, 2014

தஞ்சை ராஜராஜேச்சரம் !!!



எனது நண்பர் திரு சசி தரன் அவர்கள் நமது தஞ்சாவூர் பக்கத்தை பார்த்துவிட்டு இந்த பக்கத்தை நீங்கள் நடத்துகிறீர்களா??? என்று கேட்டார் நான் எனது நண்பர்களால் தொடங்கப்பட்டது தற்பொழுது இந்த பக்கத்தில் என்னையும் ஒரு நிர்வாகியாக எனது நண்பர்கள் ஆகிவிட்டனர் என்றேன் அதற்க்கு அவர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்ததுடன் சில அறிவூரைகளையும் வழங்கினார் அது நல்ல பக்கம் இன்னும் தஞ்சையின் வரலாற்றை பற்றி பகிர்ந்தால் அது பக்கத்தின் வளர்சிக்கும் வரலாற்றை பலர்க்கும் சென்று சேர்க்கும் என்று ஒரு அறிவுரை கூறினார் நல்ல அறிவுரை ஆகவே நான் படித்த எனக்கு தெரிந்த சில தஞ்சாவூர் வரலாற்று நிகழ்வுகளை இங்கே தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கின்றேன் அதற்கு உங்களின் ஆதரவையும் கருத்தையும் தொடர்ந்து தஞ்சாவூர் பக்கத்துக்கு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொண்டு என் பதிவை தொடங்குகிறேன்





தஞ்சை பெரியகோயில் தமிழரின் பாரம்பரியத்தையும் கலை திறமையையும் ஆயிரம் ஆண்டுகளாய் இந்த உலகிற்கு பறைசாற்றி கொண்டு இருக்கிறது, நான் உடையார் நாவல் படித்து இருக்கின்றேன் அதில் இறுதி கட்டத்தில் ராஜராஜ சோழன் இறந்த பிறகு அவரின் ஆவி கரூர் தேவரை சந்திக்க வருவது போலவும் அப்ப்பொழுது கரூர் தேவர் எங்கே செல்கிறாய் என்று கேட்கிறார் அதற்கு நம் சோழன் சொல்கிறார் "சொர்கத்திற்கு செல்கிறேன்" என்று கரூர் தேவர் சொர்கமா எங்கு இருக்கிறது??? என்று கேட்கிறார் அதற்கு சோழன் "என்னுடைய சொர்க்கம் வேறெங்கு இருக்கிறது என்னுடைய தஞ்சை நகரை தவிர வேறுஎங்கும் எனக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்காது என்னுடைய தஞ்சைதான் எனக்கு சொர்க்கம் நான் இந்த சொர்கத்தை விட்டு வேறெங்கு செல்வேன்!!!!" என்று சொல்வதாக அந்த காட்சி நகரும் அதற்கு பிறகு இறுதியில் பாலகுமாரன் அவர்கள் நான் மேலே கூறியது பொய் அல்ல உண்மை தஞ்சை பெரியகோயில் இருக்கும் வரை ராஜராஜனின் புகழ் அழியாது நாம் அழிவோம் ஆனால் சோழனின் புகழ் அழியாது பெரியகோவிலின் ஒரு ஒரு கல்லிலும் இன்னும் அவர் உயிர் வாழ்கிறார் தஞ்சையில் பிறக்கும் அனவைரின் உயிரிலும் அவர் இரண்டற கலந்து இருக்கிறார் போற்றுவோம் சோழனின் புகழை என்ற அந்த கதை முடியும் உண்மைதான் ஆயிரம் ஆண்டுகளாய் சோழனின் புகழை பறைசாற்றி கொண்டு தான் இருக்கிறது பெரியகோயில் இன்றும் நம் இதயத்தில் சோழன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அப்படி பட்ட சிறப்பு வாய்ந்த பெரியகோவிலை பற்றி நாம் முழுவதுமாக தெரிந்து கொண்டோமா??? என்றால் இல்லை அருகில் இருந்தால் அருமை தெரியாது!!! என்பது போல் நம்மில் பலர் அதை ஒரு கோவிலை மட்டுமே பார்கின்றோம் அதை கலைக்கு ஓர் எடுதுக்காடாகவோ அல்லது தமிழரின் பெருமையாகவோ நினைப்பது இல்லை, நாம் மறந்துபோன படிக்க தவறிய அந்த வராலாற்றை இங்கே காண்போம்

சென்ற நூற்றாண்டு வரை இத் திருக்கோவில் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டு இருக்கவில்லை.சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்த பொழுதிலும் அதிலுள்ள ராஜராஜேச்சரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்துகொள்ளப்படவில்லை.பெரியகோயில் பற்றி கற்பனை கதைகள் ஏட்டிலும் நாட்டிலும் வழங்கப்பட்டு வந்தன .

கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலச் சோழனால் கட்ட பட்டது என்றும் அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணமும் தஞ்சை புரி மகாத்மியம் என்னும் மராட்டிய மொழி புராணமும் கூறுகின்றன.ஜி யு போப் காடுவெட்டி சோழன் என்பான் கட்டினான் என எழுதுகிறார்.

1886 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஹீல்ஷ் என்னும் ஜெர்மன் அறிஞரை கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது.இவர் பெரியகோயில் கல்வெட்டுகளை படி எடுத்து இதனை கட்டியவன் மாமன்னன் ராசராசனே என முதன் முதலாக கூறினார்.என்றாலும் 1892இல் வெங்கையாவால் பதிக்கபெற்ற தென் இந்திய கல்வெட்டுகள் என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில் முதல் கல்வெட்டில் இடம்பெற்று உள்ள

"பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து
தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேச்சரம்"

என்ற தொடர்தான் இதை சற்றும் ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்தது

இன்றும் கூட இப்பெருங் கோவிலின் அற்புதமான கட்டிடகலை அமைதி, விமானத்தின் சிறப்பு ,கல்வெட்டுகளால் அறியபெருகின்ற கலை அரசியல் பொருளாதார மாண்புகள்,இறையன்பு ஆகியவற்றை விட நிழல் சாயாத கோபுரம்,வளர்கின்ற நந்தி,சாரபள்ளதிளிருந்து ஏற்ற்றபெற்ற 80 டன் நிறையுள்ள ஒரே பிரமந்திரக்கல் என்பன போன்ற உண்மையற்ற புனைந்துரைகளே பாமரர்களை மிகவும் கவருகின்றன என்றால் மிகையாகாது !!!!!

ஞாயிறு, 1 ஜூன், 2014

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் !!!



உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து "சரஸ்வதி பண்டாரம்" என விளங்கிய நூலகம் தஞ்சை நாயகர் காலத்தும் தொடர்ந்து விளங்கி மராட்டியர் காலத்தில் விரிந்து பெருகியது.இதனை பாதுகாத்து வளர்த்த பெருமை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசிக்கு உண்டு (1798-1832).








அவரே இந்திய மொழிகளிலும்,ஆங்கிலம் ,பிரெஞ்சு,ஜெர்மன் உள்ளித பல மேல்நாட்டு மொழிகளிலும் உள்ள 4000 துக்கும் மேற்பட்ட நூல்களை சேகரித்து நூலகத்தில் வைத்தார்.பலவற்றில் அவரின் கையெழுத்துக்கள் உள்ளன.காசி யாத்திரை மேற்கொண்ட சரபோசி அங்கு இருந்து பல வடமொழி ஏடுகளை கொண்டு வந்தார்.இங்குள்ள சுவடிகளில் பலவற்றில் ஓவியங்கள் உள்ளன. காணற்கரிய அந்த நூல்களும் சுவடிகளும் உலகில் வேறேண்டும் இல்லாதவை.மோடி ஆவணங்களில் நூலக வளர்ச்சி நடைமுறை பற்றியப் பல செய்திகள் உள்ளன. 
                                      

                                                             

இங்கு ஓலைகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட 46667 சுவடிகள் உள்ளன,அவற்றும் 39300 வடமொழியை சேர்ந்தவை தமிழ் சுவடிகள் 3490 உள்ளன,மராட்டிய சுவடிகள் 3075 தெலுங்கு சுவடிகள் 802. பல இலக்கிய இலக்கண நாடகம் தொடர்பானவை மேலும் கஜ,அசுவ சாஸ்திர சுவடிகளும் மருத்துவ சுடிகளும் உள்ளன.

                                     
இந்நூலகத்தின் மராத்தி மொழியில் மோடி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் 850 கட்டுக்கள் உள்ளன,அவர்ற்றில் 2,55,000 ஆவங்கள் உள்ளன.இம் மோடி ஆவணங்களின் தமிழாக்கத்தை தமிழ் பல்கலை கழகம் வெளியிட்டு உள்ளது.மேலும் தமிழ் பல்கலையில் உள்ள இது போன்ற மோடி ஆவணக்ளை மின்படியாக்கம்( digitizing) எடுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்க்க தமிழ் பல்கலைகழகத்திற்கு மகராஷ்டிர அரசு 80 லட்சம் கொடுத்து உள்ளது.


சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சொந்தமாக அச்சகமும் உள்ளது.இந்த அச்சகம் மூலம் இதுவரை 500 கும் மேற்பட்ட வெளியிடுகள் வந்து உள்ளன.இதில் தமிழில் மட்டும் 200கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.1939 முதல் ஒரு பருவ இதழ் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.மேலும் அருங்காட்சியகமும் நுண்பட பிரிவும் உள்ளது.


ஆங்கிலேயர்கள் தங்களது சொத்தாக நினைத்த இந்த நூலகத்தை நார்ட்டன் துரையின் உதவியோடு மீட்டவர் சிவாஜி மன்னரின் மனைவி காமாட்சியம்ம பாய் ஆவார்.மராட்டிய மன்னர் குடும்ப சொத்தாக இருந்த இந்நூலகம் 05/10/1918 முதல் பொது நூலகமாக ஆயிற்று.


நூலகத்தில் சரபோஜி பெயரும் சூட்டப்பட்டது.1983 முதல் தேசிய முகிதுவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது, மைய மாநில உதவியுடன் சிறப்பாக இயங்கி வரும் இந்நூலகத்தில் பல மொழிகளில் 42600 நூல்களை கொண்டு அறிய நூலகம் உள்ளது.நவீன வசதியுடன் பழ்ந்சுவடிகள் பாதுகாகபடுகின்றன.ஆண்டு தோறும் சரபோசி பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாடபடுகிறது.


2006 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைகழகம் இந்த நூலகத்தை தனது ஆராய்ச்சி மையமாக அங்கீகரித்தது. அதே போல் தஞ்சை தமிழ் பல்கலைகழகமும் முனைவர் பட்ட ஆய்வை சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது.இன்று இந்த நூலகம் ஒரு உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல.


காசிக்கு சென்றால் கங்கை நிராடுவது எவ்வளவு முக்கியமாக கருதப்டுகிறதோ அதை விட முக்கியம் தஞ்சை வந்தால் சரஸ்வதி மகால் நூலகத்தை பார்ப்பது Encyclopedia of Britannica இந்த நூலகம் பற்றி "The Most Remarkable Library In India" என்று குறுப்பிட்டு உள்ளது. பல மேல்நாட்டு அறிஞர்களின் புகழ்ச்சியையும் பாராடுகளையும் பெற்ற நூலகம். 


மேற்கூறிய தகவல்கள் நெஞ்சை அல்லும் தஞ்சை என்ற புத்தகத்தில் இருந்தும் சில தகவல்கள் தி ஹிந்து மற்றும் தினத்தந்தி நாளிதழ்களில் இருந்து எடுக்கப்பட்டது

வெள்ளி, 16 மே, 2014

பழந்தமிழர் ஞானம்


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

வியாழன், 15 மே, 2014

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்



கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோயில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிஷேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோயில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோயில்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோயில்கள் என அனைத்துக் கோயில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.
temple-mandapam-thiruvaiyaru
 இங்கே நடக்கும் தவறு என்ன..?
கோயிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டடக்கலை, கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோயிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோயில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோயிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோயிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.
 யார் செய்கிறார்கள்?
இந்த மாஃபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்- தொண்டு நிறுவனங்கள், சிலைக் கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றுக்கு ஏஜென்ட்களாகச் செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளைப் பெரிதுபடுத்தி இடிக்கச்சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குத் துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.
 ஏன் செய்கிறார்கள்?
  • இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை.
  • மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த  வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற  ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி – கோயில்கள் அழிப்பு
  • கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்க மயமாக்கலுக்கு) பாரம்பரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டுப் பெருமுதலாளிகளும்- தொண்டு அமைப்புக்களும்- மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.
  • இந்தியாவின் வரலாற்றைத் திரிக்க நினைக்கும் வெளிநாட்டு- உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.
  • இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்திச் செல்வோரின் நோக்கமும் அதுவே.
  • ஸ்தபதிகளுக்கு, இருப்பதை சீரமைப்பதை விட இடித்துக் கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.
  • சில அறங்காவலர்கள்- பெரிய மனிதர்கள், விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோயிலை இடித்து புதிதாகக் கட்ட நன்கொடை அளித்துத் தூண்டுகிறார்கள்.  கோயில்களை தங்கள் கௌரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.
  • பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோயில் சிதைப்புக் கும்பலின் பணத்திற்கு- சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.
 எப்படிச் செய்கிறார்கள்?
  • முதலில் கோயிலில் அது பின்னம்,  இது குறை என்று மாற்றங்களைச் சொல்லும் இந்த மாஃபியா குழு, கோயில் குழுவினரை ‘தெய்வ குற்றம்’ என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளைச் சொல்லும்போது, கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களைச் சொல்லி, புராதனச் சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.
sandblasting-3
  • சில இடங்களில் கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பழமையான கோயிலையே இடித்துத் தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோயில்கள் என்னும் பெயரில் கட்டடங்கள் கட்டுகிறார்கள்.
  • சுத்தப்படுத்துகிறேன் என்னும் பெயரில், கோயிலின் சுவர்களிலும்,  தூண்களிலும் சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும்  (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும்; காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.
  • வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.
  • கருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் ஃபோகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது,  கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோயில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோயிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.
இப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.
சில உதாரணங்கள்:
  • தஞ்சை பெரிய கோயில்–  கல்வெட்டுக்களும், புராதனச் சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008).
(http://janajaati.blogspot.in/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html)
  • திருவொற்றியூர் கோயில் – சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு,  கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது  (2013).
(http://www.dinamalar.com/news_detail.asp?id=789444)
  • காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் – கோயிலை விளம்பரத் தளமாக  மாற்றினார்கள். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடின. கோயில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.
(http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847)
  • சேவூர் வாலீஸ்வரர் கோவில் –  கல்வெட்டுக்கள் சேண்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோயில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.
(http://sevurwar3.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)
  • சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதனச் சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று?  கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்
http://www.aazham.in/?p=1718
http://chasingaphrodite.com/tag/art-of-the-past/
  • சிலைக் கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு. சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=zOgpYsUf6Ac
இவை சில உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோகச் சிலைகள் கடத்தப்படுகின்றன. சமீபத்தில் மதுரைக் கோயிலுக்கு சொந்தமான ரூ. 66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோயில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோயில்கள் வரை இந்த மாஃபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.
மக்கள் செய்யவேண்டியது என்ன? 
v  நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.
v  கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.
v  சேண்ட் பிளாஸ்டிங் மூலமோ, இல்லை பிற பணிகள் மூலமோ கோயிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாகத் தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
v  கோயிலின் தொன்மையான தூண்கள்,  சுவர் கற்கள், சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதைக் கண்டால் உடனடியாகத் தடுக்க வேண்டும்.
v  கோயிலின் கருவறையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக் கூடாது.  கோயிலின் கருவறைகளின் நீள- அகல- உயரங்களை மாற்றம் செய்யக் கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.
v  செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை- கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோயிலில் பயன்படுத்தக் கூடாது. நாட்டுப் பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
திரிபுவனம் ஆலயம்
திரிபுவனம் ஆலயம்
அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
  • தற்போது நடைபெற்று வரும் அனைத்து கோயில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோயில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மிக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • கோயில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோயிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களைத் தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
  • சிலைக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து, வேரோடும்- வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
  • கடந்த ஆண்டுகளில் நடந்த கோயில் வேலைகளைக் கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களைக் கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.
  • தொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதனச் சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும்.
  • தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை- கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத் துறை வெளியேறி, ஆன்மிகக் குழு, கோயிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்புப் பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
  • புதிய கோயில் பணிகளை, வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மிக அமைப்புக்கள், பக்தர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.
தற்போது நடக்கும் வேகத்தில் கோயில் அழிப்புப் பணிகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் சுற்றுலாத் தலங்கள் இருக்கும்;  கோயில்கள் இராது. இருந்தாலும் அதில் சாந்நித்யம் இராது. மாலிக் காபூர் ஏற்படுத்திய சேதத்தை விட கொடூரமான சேதங்களை தற்போதைய நவீன மாலிக் காபூர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.
அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

செவ்வாய், 6 மே, 2014

ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி


ஸ்ரீகண்டியை நான் முதலில் பார்த்தது மத்திய ஜாவாவின் முக்கிய நகரான செமராங்கின் (Semarang) அஹமத்யானி விமானநிலையத்தின் உள்ளே கலைப்பொருள்களை விற்கும் ஒரு கடையில். 1996 மே மாத இறுதியில் இந்தோநேசியாவில் வேலைக்குப் போன புதிதில் அந்த நாட்டின் பல பகுதிகளில் ஆலைகளைக் கொண்டிருந்த என் கம்பெனியில் அறிமுகப்படலம் என்று ஓரியன்டேஷனுக்காக சுற்றிக் கொண்டிருக்கையில்.
போர்க்கோலத்தில் ஓர் இளைஞன் வில்லேந்திய அழகிய இளம்பெண்ணைத் தழுவியவாறு தொடையில் அமர்த்தி நிற்கும் அந்த வினோத பொம்மையைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். உடன் அருகில் வந்த விற்பனைப்பெண் வாங்குகிறீர்களா என்று வினவ விலை மலைக்கும்படி இருந்ததால் மறுத்தாலும் இதில் இருப்பது யார் என்று கேட்டேன்.
அர்ஜுனனும் ஸ்ரீகண்டியும் என்றாள் அந்தப்பெண். அட சிகண்டி!
சிகண்டியா என்று அதிசயித்துக் கேட்க ‘ஸ்ரீகண்டி! அர்ஜுனன் மனைவி’ என்றாள்.
srikandi_java_1சிகண்டி அர்ஜுனன் மனைவியா! இது என்னடா நான் அறிந்திராத பாரதக்கதையாய் இருக்கிறதே என்று திகைத்து நின்றேன்.
பின்னர் ஜாவாவில் நான் வாழ்ந்திருந்த பத்துவருடங்களில் அந்த நாட்டின் கவி என்ற பண்டைமொழியில் எழுதப்பட்ட ஜாவானிய மஹாபாரதம் நான் அறிந்திராத அதன் பல கிளைக்கதைகளுடன், சிகண்டி, அரவான், கடோத்கஜன், அபிமன்யு, சாம்பன் என்று அதிநுணுக்கமாய் ஒவ்வொரு பாத்திரத்துடனும் விரிய விரிய வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருந்தது.
இன்று அம்பையின் கதையை ஜெயமோகனின்  வெண்முரசு மகாபாரத நாவலில் படித்த உணர்வு மிகுதியில் ஜாவானிய ஸ்ரீகண்டி என்னை எழுதத்தூண்டினாள்.
அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் ஸ்ரீகண்டியின் கதையைத்தான்.
நம்மூரில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி என்றால் ஒட்டுமீசை பொருத்தி கோட், தலைப்பா சகிதம் பாரதியாகவோ, கோமணத்தைக் கட்டி கையில் வேலைக் கொடுத்து முருகனாகவோ எளிதாய் வேடம் கட்டுவதைப் போல் ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு.
*****
ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்.
யாகசாலை அக்கினியில் திரௌபதியும், புகையில் திருஷ்டத்யும்னனும் தோன்றிய பின்னர் மன்னன் துருபதராஜனுக்கும் கந்தவதிக்கும் இயல்வழியில் பிறக்கும் மகள் சிகண்டினி. அவள் பிறந்தபோதில் ‘இந்தக்குழந்தை பீஷ்மரைக் கொல்லவே பிறந்திருப்பவள். இவளை ஆணாகவே வளர்த்திடுக’ என்று தேவதைகள் சொல்ல அதைக் கேட்டஞ்சும் மன்னன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாது அவளை வளர்க்கிறான்.
srikandi_java_2சிறுவயதிலிருந்தே அஸ்திரப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிகண்டினி ஓர் ஆணைப் போலவே வளர்கிறாள். மணம்முடிக்கும் பருவம் வருகையில் ஆண்தன்மையே மிகுந்திருக்கும் சிகண்டினி ஒரு பெண்ணையே விரும்பி மணக்கிறாள். மணநாளிரவில் கணவன் ஆணல்லன் என்று மனைவிக்குத் தெரியவந்து அழுதுபுலம்ப, சிகண்டினி அவளை விடுத்து வனவாசம் செல்கிறாள்.
வனத்தில் திரிந்திருக்கையில் யட்சன் ஒருவன் இரக்கம் கொண்டு சிகண்டினிக்கு ஆணுறுப்பைத் தந்து சிகண்டியாக்கி, விரும்புகையில் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் வரத்தையும் நல்கி, காமக்கலையின் நுணுக்கங்களையும் சொல்லித் தருகிறான். வீடு திரும்பும் சிகண்டி மனைவியுடன் இல்லறத்தைத் தொடர்ந்து நடத்துகிறான்.
பின்னர் அண்ணன் திருஷ்டத்யும்னன் அஸ்தினாபுரியில் துரோணரிடம் வில்வித்தை கற்கச் செல்கையில் உடன் செல்லும் சிகண்டி அங்கு அழகன் அர்ஜுனனைக் கண்டு அவன் மேல் காதல் கொண்டு மீண்டும் பெண்ணாகிறாள். அர்ஜுனனிடம் பயிற்சிபெறும் அபிமன்யு முதலானோருடன் சேர்ந்து தானும் வில்வித்தை கற்கிறாள். சடுதியில் கற்றுத் தேரும் சிஷ்யை சிகண்டினியின் திறமையால் கவரப்படும் அர்ஜுனன் ஒருகட்டத்தில் காதல்வயப்பட்டு அவளை மணந்து கொள்கிறான்.
பின் சிகண்டினி வீடுதிரும்பி சிகண்டியாகி ஆண்வேடம் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து, பாரதப்போரில் பீஷ்மரைப் பழிவாங்கவே மீண்டும் அர்ஜுனனிடம் சேர்வதற்குப் பெண்ணாகித் திரும்பி வருகிறாள்.
அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி
அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி
குருக்ஷேத்திரப்போரில் ஸ்ரீகண்டி எவ்வாறு பீஷ்மரை வீழ்த்துகிறாள் என்பதில்தான் அவள் ஜாவாவின் நாயகி ஆகி நிற்கிறாள்.
முற்பிறவியில் தன்னை அலைக்கழித்த வன்மத்தை மறக்காமல் காங்கேயன் பீஷ்மரை இப்பிறவியில் வென்றழிக்க காங்கேயன் முருகனையே இஷ்டதெய்வமாய்க் கொண்டு கடும்தவம் மேற்கொள்கிறாள் ஸ்ரீகண்டி.
தவத்தால் உருவேற்றப்பட்ட தாந்த்ரீக பலம் (Thaumaturgic) கொண்ட ஸ்ரீகண்டியின் வில் ஜாவானியக் கூத்துகளில் வியந்தோதிப் பாடல்பெறும் தனிச்சிறப்புடையது. விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி. அதிலிருந்து எய்யப்படும் அம்பு தார்மீகத்தில் பிறழாது நிற்பவன், நியாயவான் எனில் கொல்லாது திரும்பும். ஆனால் தர்மத்திலிருந்து சற்றும் பிறழ்ந்தோனைத் தவறாது கொல்லும்.
srikandi_java_3
இங்குதான் இந்திய ஜாவானிய பாரதக்கதைகளிடையே முக்கியமான வேறுபாட்டினைக் காண்கிறேன். இந்தியப்பதிப்புகள் எல்லாவற்றிலும் பீஷ்மர் 100 விழுக்காடு அப்பழுக்கில்லா அறவானாகவும், தம் சாவினை தாமே முடிவு செய்யும் வரவானாகவும், அம்பையை எதிர்கொள்ள விருப்பமின்றி விட்டுக்கொடுக்கும் சுத்தவீரனாகவும் காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் – ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் – அர்ஜுனனைப் பின்தள்ளி, நிராயுதபாணியாய் நிற்கும் பீஷ்மரைக் கொல்லப்பார்க்கும் சற்றே வில்லத்தனம் கலந்த நபும்ஸகன் சிகண்டியின் பிம்பமே என்னுள் இருந்தது. இந்தியர் பலருக்கும் அவ்விதமே இருக்கலாம். மேலும் பீஷ்மர் தம்மை வீழ்த்தும் அம்புகளை உருவி எடுத்துப்பார்த்து இவை அர்ஜுனன் எய்தவையே என்று மகிழ்ந்து உயிர்வாழும் வேட்கை விடுத்துப்பின் தேரிலிருந்து வீழ்வது போல் கதை செல்லும்.
ஜாவானியப் பதிப்பில் அம்பைக்கு பீஷ்மரிலும் உயர்ந்த தேவிவடிவம் தந்து அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள் எய்யும் ஹ்ருஸாங்கலியின் அம்பே பீஷ்மரை வீழ்த்தித் தீர்ப்பையும் நிறுவுகிறது.
அதனால்தான் அவள் நாயகி! ஜாவானிய, சுந்தானிய, இந்தோநேசிய மொழிகளில் நாயகி என்றாலே ஸ்ரீகண்டிதான். ஐயம் கொண்டோர் கூகிள் மொழிபெயர்ப்பானைச் சொடுக்கவும் –http://translate.google.com/#id/ta/srikandi
மேலே மடித்து நிமிர்த்தக்கூடிய ஹ்ருஸாங்கலி என்ற அம்பாதேவியின் வில்லின் அமைப்பு எப்படி இருக்குமென்று பலரும் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார்.  படம்: கூகிள் உபயம்.
srikandi_bow_java
*******
ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.
ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.
ஜாவாவில் ‘வாயாங் குலித்’ (Wayang Kulit) என்ற தோல்பாவைக் கூத்தின் மூலம் இப்படி ஏராளமான மகாபாரதக் கதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதை நடத்துவோர் தத்தம் சொந்தப்பார்வையில் சில அற்புதமான கருத்துகளை கதையினூடே சொல்லிப்போவார்கள்.
‘ஸ்ரீகண்டியின் மந்திரசக்தி வாய்ந்த அம்பால் எப்படி தர்மத்திலிருந்து வழுவாத பீஷ்மரை வீழ்த்த முடிந்தது!’ என்று கேள்வி கேட்டு அவரே அபாரமான பதிலும் சொல்வார்.
‘பீஷ்மரான தேவவிரதர் தாம் தந்த வாக்கை எந்நாளும் மீறாத சத்தியவாழ்க்கை வாழ்ந்தவர்தாம். அவர் அப்படியே இருந்திருந்தால் அம்பையால் அவரை வீழ்த்தியிருக்கவே முடியாது. ஆனால் என்று பீஷ்மர் அதர்மத்தின் பக்கம் துணை போனாரோ அன்றே அவர் வீழ்ச்சி தொடங்கியது. தேவி திரௌபதியை சபை நடுவே துகிலுரிந்ததைப் பார்த்தும் அமைதி காத்தாரே அன்றே அவரைக் கொல்ல தேவி ஸ்ரீகண்டியின் அஸ்திரமான ஹ்ருசாங்கிலிக்கு சக்தி வந்து விட்டது!’
ஸ்ரீகண்டியின் தொன்மக்கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் அவர்களிடை இருந்து வருவது. மத்திய ஜாவாவின் மாஜாபஹித் (Majapahit) அரசில் ஸ்ரீகண்டி சேனை என்று போர்ப்பயிற்சியில் சிறந்த பெண்களின் படையே தொடர்ந்து இருந்திருக்கிறது.

ஒருமுறை மத்திய ஜாவா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது இயற்கை அரசாளும் டியாங் பீடபூமியில் (Dieng Plateau) அமைந்திருக்கும் 1300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாண்டவர்களின் கோயில்களைப் பார்த்தோம். ஸ்ரீகண்டியின் ஜாவானியக் கதைக்கு ஆதாரசாட்சியாய் அங்கே அர்ஜுனன் கோயிலுக்குப் பக்கத்திலேயே தேவி ஸ்ரீகண்டிக்கும் கோயிலைக் கண்டு வியந்து நின்றேன்.  Candi Srikandi என்றே இக்கோயில்  அழைக்கப் படுகிறது.
candi_srikandi_temple_java
ஜாவா தீவின் மத்தியப் பகுதியில் Dieng Plateau வில் உள்ள கோயில்கள்
அம்பையின் கதை அங்கே என்றும் உயிர்த்திருக்கும். இன்றும் பெண்ணுரிமைக் குழுக்கள் மட்டுமின்றி, மாற்றுப்பாலினக்குழுக்கள் பலவும் – நம்மூரில் அரவானைப்போல் – ஸ்ரீகண்டியின் பெயரில் தங்களை அமைப்பு ரீதியாய் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இப்படி ஓர் அமைப்பு சமீபத்தில் எடுத்த ‘அனக் அனக் ஸ்ரீகண்டி’ (Anak Anak Srikandi – ஸ்ரீகண்டியின் குழந்தைகள்) என்றொரு குறும்படம் உலகத்திரைப்பட விழாவொன்றில் பரிசு வென்ற

புதன், 30 ஏப்ரல், 2014

பிள்ளையாரின் பிறப்பு



இன்று பிள்ளையார் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.
1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்
2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்
4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.
vinayagar_01
இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.
மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.
பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.
உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.
பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.
வடக்கே தெற்கே ஒட்டி
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதாமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு
ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும்ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.
வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்
சப்பாணிப் பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)
வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.
எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!
கட்டுரைக்கு உதவி -
தமிழர் நாட்டுப்பாடல் நூல் – நா வானமாமலை எம்.ஏ. எல்.டி

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சித்தேசன்




அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள்(நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள்.                                                                 
- ந.முருகேச பாண்டியன் (கிராமத்து தெருக்களின் வழியே)
இளமைக் காலத்தில் விடுமுறை நாட்களில் கிராமத்திலுள்ள தாய்வழித்தாத்தா வீட்டிற்குச் செல்வது கொண்டாட்டமான விசயம். அந்த நாட்களை இப்போது நினைக்கும்போதும் மகிழ்வாகயிருக்கிறது. பெரிய காரை வீடானாலும் சின்ன குடிசை வீடானாலும் திண்ணையோடிருக்கும் வீடுகள், வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்கள், ஓசிக்கஞ்சி எனக் கேலி செய்யும் மாமா முறையினர், கிணற்றடியின் குளுமை என கிராமத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய ஆச்சர்யங்களை தந்துகொண்டேயிருக்கும். கிராமத்தின் நினைவுகளையூட்டும் ந.முருகேச பாண்டியனின் ‘கிராமத்துத் தெருக்களின் வழியே’ நூல் நல்லதொரு ஆவணம்.
கிராமங்களில் வெள்ளுடை உடுத்தி மணியாட்டிக்கொண்டு வரும் சாமியார்களை இளம் வயதில் பார்த்திருக்கிறேன். மணியாட்டிக்காரர்கள் மணியை தலைகீழாக கவிழ்த்தி அதில் கம்பை வைத்து சுழற்றும் போது வரும் மணியோசையும், மணியாட்டிக்காரர்கள் பாடும் பாட்டும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று எங்கம்மா கூறினார். அந்தப் பாட்டில் நெல்லின் பலரகப்பெயர்களை சேர்த்து பாடுவதையும் குறிப்பிட்டார்.
மணி
சமீபத்தில் மதுரை கூடல்நகர் அருகே நானும் நண்பரும் பயணித்துக் கொண்டிருந்தபோது மணியாட்டிக்காரர்களை பார்த்தோம். அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது திருச்செந்தூர் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக இப்படி மணியடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று நெல், பணம் காணிக்கையாக பெறுவதாகக் கூறினார். திருச்செந்தூரில் இவர்களுக்கென்று பாத்தியப்பட்ட மடம் ஒன்று இருக்கிறதாம். தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணிமூலம் ஆகிய நாட்களை ஒட்டி கிராமங்களில் பயணிப்பார்களாம். குடும்பத்தில் மூத்த உறுப்பினர் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பெரியவர் கூறினார்.
‘அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்’ என அன்பேசிவத்தில் இறுதியில் கமல்ஹாசன் சொல்லும் வரிகள் ஞாபகம் வருகிறது. நீங்கள் மணியாட்டிக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குறித்து விரிவாக பதிலிடுங்களேன்.
நன்றி

பிள்ளையாரின் பிறப்பு



இன்று பிள்ளையார் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.
1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்
2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்
4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.
vinayagar_01
இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.
மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.
பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.
உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.
பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.
வடக்கே தெற்கே ஒட்டி
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதாமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு
ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும்ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.
வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்
சப்பாணிப் பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)
வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!
பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.
எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!
கட்டுரைக்கு உதவி -
தமிழர் நாட்டுப்பாடல் நூல் – நா வானமாமலை எம்.ஏ. எல்.டி