வியாழன், 25 டிசம்பர், 2014

நயினார்அகரம்


மன்னர்கள் கோயில்களை பெருமளவு கட்டுவதற்கு காரணங்கள் உண்டு. அது கடவுள் பக்தி, கட்டிட கலையை வளர்க்க, நாட்டின் செழிப்பை நிரூபிக்க என்று பல காரணங்கள் உண்டு. சில மன்னர்கள் கோயில்களைக் கட்டி பெயர் பொறித்த காரணத்தால் இன்றளவும் வரலாற்றில் இடம்பெறுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
                                           இப்படியாக கோயில்களால் நினைவூட்டப்படும் மன்னர்களில் ஒருவர் குலசேகர பாண்டியன். கி.பி 15 ஆம் நூற்றாண்டில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிற்றரசன். அகரம் என்று முடியும் ஐந்து சிற்றூர்களை ஆண்டிருக்கிறான். காலப்போக்கில் அகரம் எனும் இரண்டு ஊர்கள் அழிந்துபோயின. மீதமுள்ள மூன்று ஊர்களில் மேலகரம்இ நன்னகரம்இ நயினாரகரம் இன்றும் அதே பெயர்களைக் கொண்டுதான் அழைக்கப்படுகின்றன.
                                       சிற்றரசனாகிய குலசேகர பாண்டியன் ஆண்ட ஊர்களில் பல கோயில்களைக் கட்டிய இவன் தான் கட்டிய கோயில்களின் பெயர்களில் மட்டும் தன் பெயரைப் பொறிக்காது கடவுள் பெயர்களின் முன்னாலும் தன் பெயரை சூடினான். உதாரணமாக குலசேகர நாதர்இ குலசேகர விநாயகர்இ குலசேகர அம்மன் என்று பெயர் சூட்டினான்.
                                      குறிப்பிடத்தக்க வகையில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிற்றரசன் வைஷ்ணவ தெய்வமாகிய பெருமாள் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளான். புத்திக் கூர்மையுடன் இந்த கோயில் தெய்வத்திற்கு முதல் பெயராக தன்பெயரை சூட்டாது நீலவேணிநாத வெங்கடேசப் பெருமான் என்று பெயரை வைத்துவிட்டான். இதன்மூலம் இந்துக்களில் பாகுபாடு ஏற்படுவதை விரும்பாத மன்னன் என்று புலப்படுகிறது.
                                  இவ்வாறு தான் கட்டிய கோயில்களில் மட்டுமல்லாது கோயிலுக்கு பெயர் சூட்டிய விதத்திலும் இன்றளவும் வரலாற்றில் இடம்பெறுகிறான் இந்த குலசேகரபாண்டியன். இப்படி கோயில்கள் கட்டி வரலாற்றில் எப்படி இடம்பெறாமல் போவான்? தென்காசி காசிவிசுவநாதர் கோயிலைக் கட்டிய பேரரசன் பராக்கிரமபாண்டியனின் தம்பிதான் இந்த குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
                                   சிற்றரசன் குலசேகரபாண்டியன் ஆண்ட நயினாரகரத்தில்தான் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள கருப்பாநதி ஆற்றங்கரையில்தான் இதில் இரண்டு கோயில்களும் (குலசேகர அம்மன்இ குலசேகர விநாயர்) அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. அக்ரஹார தெருவின் மேற்கில் வைஷ்ணவ தெய்வமாகிய பெருமாள் கோயிலும் கிழக்கில் குலசேகர நாதர் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பாண்டியமன்னனின் ஆட்சியின்கீழ் வைஷ்ணவர்களும்இ சைவர்களும் ஒரே அக்ரஹாரத்தில் வாழ்ந்துவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
                                   இப்படியான பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலானது சரிவர இன்று கவனிக்கப் படுவதாய் தெரியவில்லை. நான்கு குலசேகர கோயில்களில் அம்மன் கோயில் மட்டும்தான் மக்களால் பெரிதும் வழிபடப்படுகிறது. இப்படியான பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலானது சரிவர இன்று கவனிக்கப் படுவதாய் தெரியவில்லை. நான்கு குலசேகர கோயில்களில் ஒன்றான அம்மன் கோயில் மட்டும் இவ்வூர் மக்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கோயில்கள் அனைத்தையும் இந்து அறநிலைத்துறை கண்காணிப்பில் கொண்டு புதுப்பித்தால் குலசேகர பாண்டியனின் சிறப்பு இன்னும் பல நூற்றாண்டிற்கும் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக