வியாழன், 25 டிசம்பர், 2014

நயினார்அகரம்


மன்னர்கள் கோயில்களை பெருமளவு கட்டுவதற்கு காரணங்கள் உண்டு. அது கடவுள் பக்தி, கட்டிட கலையை வளர்க்க, நாட்டின் செழிப்பை நிரூபிக்க என்று பல காரணங்கள் உண்டு. சில மன்னர்கள் கோயில்களைக் கட்டி பெயர் பொறித்த காரணத்தால் இன்றளவும் வரலாற்றில் இடம்பெறுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
                                           இப்படியாக கோயில்களால் நினைவூட்டப்படும் மன்னர்களில் ஒருவர் குலசேகர பாண்டியன். கி.பி 15 ஆம் நூற்றாண்டில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிற்றரசன். அகரம் என்று முடியும் ஐந்து சிற்றூர்களை ஆண்டிருக்கிறான். காலப்போக்கில் அகரம் எனும் இரண்டு ஊர்கள் அழிந்துபோயின. மீதமுள்ள மூன்று ஊர்களில் மேலகரம்இ நன்னகரம்இ நயினாரகரம் இன்றும் அதே பெயர்களைக் கொண்டுதான் அழைக்கப்படுகின்றன.
                                       சிற்றரசனாகிய குலசேகர பாண்டியன் ஆண்ட ஊர்களில் பல கோயில்களைக் கட்டிய இவன் தான் கட்டிய கோயில்களின் பெயர்களில் மட்டும் தன் பெயரைப் பொறிக்காது கடவுள் பெயர்களின் முன்னாலும் தன் பெயரை சூடினான். உதாரணமாக குலசேகர நாதர்இ குலசேகர விநாயகர்இ குலசேகர அம்மன் என்று பெயர் சூட்டினான்.
                                      குறிப்பிடத்தக்க வகையில் பாண்டிய வம்சத்தை சேர்ந்த சிற்றரசன் வைஷ்ணவ தெய்வமாகிய பெருமாள் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளான். புத்திக் கூர்மையுடன் இந்த கோயில் தெய்வத்திற்கு முதல் பெயராக தன்பெயரை சூட்டாது நீலவேணிநாத வெங்கடேசப் பெருமான் என்று பெயரை வைத்துவிட்டான். இதன்மூலம் இந்துக்களில் பாகுபாடு ஏற்படுவதை விரும்பாத மன்னன் என்று புலப்படுகிறது.
                                  இவ்வாறு தான் கட்டிய கோயில்களில் மட்டுமல்லாது கோயிலுக்கு பெயர் சூட்டிய விதத்திலும் இன்றளவும் வரலாற்றில் இடம்பெறுகிறான் இந்த குலசேகரபாண்டியன். இப்படி கோயில்கள் கட்டி வரலாற்றில் எப்படி இடம்பெறாமல் போவான்? தென்காசி காசிவிசுவநாதர் கோயிலைக் கட்டிய பேரரசன் பராக்கிரமபாண்டியனின் தம்பிதான் இந்த குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
                                   சிற்றரசன் குலசேகரபாண்டியன் ஆண்ட நயினாரகரத்தில்தான் இந்த கோயில்கள் அமைந்துள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள கருப்பாநதி ஆற்றங்கரையில்தான் இதில் இரண்டு கோயில்களும் (குலசேகர அம்மன்இ குலசேகர விநாயர்) அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. அக்ரஹார தெருவின் மேற்கில் வைஷ்ணவ தெய்வமாகிய பெருமாள் கோயிலும் கிழக்கில் குலசேகர நாதர் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பாண்டியமன்னனின் ஆட்சியின்கீழ் வைஷ்ணவர்களும்இ சைவர்களும் ஒரே அக்ரஹாரத்தில் வாழ்ந்துவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
                                   இப்படியான பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலானது சரிவர இன்று கவனிக்கப் படுவதாய் தெரியவில்லை. நான்கு குலசேகர கோயில்களில் அம்மன் கோயில் மட்டும்தான் மக்களால் பெரிதும் வழிபடப்படுகிறது. இப்படியான பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலானது சரிவர இன்று கவனிக்கப் படுவதாய் தெரியவில்லை. நான்கு குலசேகர கோயில்களில் ஒன்றான அம்மன் கோயில் மட்டும் இவ்வூர் மக்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கோயில்கள் அனைத்தையும் இந்து அறநிலைத்துறை கண்காணிப்பில் கொண்டு புதுப்பித்தால் குலசேகர பாண்டியனின் சிறப்பு இன்னும் பல நூற்றாண்டிற்கும் நிலைத்து நிற்கும்.

நயினாரகரம் மாட்டுச்சந்தை


அழிந்து வரும் பாரம்பரியமிக்க  நயினாரகரம்  மாட்டுச்சந்தை 
           திருநெல்வேலியிலிருந்து 70 கிலோமேட்டார் துரத்தில் தென்காசி நகராட்சியில் இருக்கும் ஒரு அழகிய குக்கிராமம் நயினாரகரம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. திருநெல்வேலிக்கு அல்வா சிறப்பு என்று அனைவரும் அறிந்தது. அதுபோல நயினாரகரம் என்ற கிராமத்தின் சிறப்பு ‘சந்தை’. சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை பெற்ற அச்சந்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கே சிறப்பு என கூறலாம். தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் நயினாரகரம் சந்தையும் ஒன்று. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள அச்சந்தைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலத்தில் இருந்தும் மக்கள் வந்து பொருட்களை வாங்கியும், விற்றும் செல்வார்கள். 
               சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் கூட இங்கு பொருட்களை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் இப்பொழுது போல எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் கிடைக்கும் என்பது இல்லை. இது மாதிரி சந்தைகளில் தான் மக்கள் தங்களுக்கு தேவையானதை பண்டமாற்று செய்து கொள்வார்கள். இப்பொழுதுதான் மக்களிடம் பணம் மாற்று முறை என்ற பழக்கம் வந்துள்ளது. ஆனால் அந்த காலத்தில் ஒருவருக்கும் அரிசி வேண்டுமென்றால் அவர் தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் பருப்பு, கோதுமை இல்லை ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள். நயினாரகரம் சந்தையும் அந்த மாதிரி இயங்கி வந்தது. வாரம் ஒருமுறை பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்தவண்ணம் இருக்கும். இச்சந்தையில் கிடைக்காத பொருட்கள் கிடையாது. நமக்கு தேவையான அனைத்துமே அங்கு கிடைக்கும்.
சந்தை நடைபெறும் சனிக்கிழமை தோறும் திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்தும் போயும் இருப்பார்கள். இச்சந்தையின் மிகப்பெரிய சிறப்பு மாடுகள்.
கரவ மாடுகள், எருமை மாடு என அனைத்து வகை மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் அலைமோதுவார்கள். கேரளா, ஆந்திரா மற்றும் பிற  மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான மாடுகளை இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள். இச்சந்தையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வந்தனர். 
நாளடைவில் நாகரீகம் வளர வளர மக்களின் தரமும் உயர்ந்தது. ஆனால் இச்சந்தை தன் அழிவை நோக்கியே சென்றுக்கொண்டிருந்தது. மக்களின் தரம் உயர்ந்தது ஆங்காங்கே நமக்கு தேவையான பொருட்கள் நம் வீட்டின் அருகிலே பெற்றுக்கொள்ளும் வசதியை நாம் இப்பொழுது பெற்றுள்ளோம். முன்னர் போல் யாரும் சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குவதில்லை. தற்பொழுது இருக்கும் பொருட்கள் எதற்கும் தரமும் அவ்வளவு இல்லை. விலையும் உயர்ந்ததாக உள்ளது. ஆனால் அக்கால சந்தையில் தரத்திற்கும் ஏற்ற மிகக்குறைந்த விலையில் பொருட்களை வாங்கி மக்கள் பயனடைந்தார்கள். இப்படி பல சிறப்புக் கொண்ட அச்சந்தை தற்போது அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது  வருத்தமளிக்கிறது.
வாரம் வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை இயங்கும். அதுவும் இப்பொழுது எல்லாப் பொருட்களும் அங்கு கிடைப்பதில்லை, சனிக்கிழமை தோறும் பிற மாநிலங்களில் மாடுகளை மட்டும் கொண்டு வியாபாரம் செய்து விட்டு செல்வார்கள். இது மாதிரி சந்தை நம் காலத்தில் இல்லை என்பது நமக்கு வருத்தட்டிற்குரியது. அழிந்து வரும் இச்சந்தையின் புகழை நாம் என்றும் மறந்திட முடியாது