வெள்ளி, 16 மே, 2014

பழந்தமிழர் ஞானம்


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

வியாழன், 15 மே, 2014

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்



கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோயில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிஷேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோயில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோயில்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோயில்கள் என அனைத்துக் கோயில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.
temple-mandapam-thiruvaiyaru
 இங்கே நடக்கும் தவறு என்ன..?
கோயிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டடக்கலை, கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோயிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோயில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோயிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோயிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.
 யார் செய்கிறார்கள்?
இந்த மாஃபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்- தொண்டு நிறுவனங்கள், சிலைக் கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றுக்கு ஏஜென்ட்களாகச் செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளைப் பெரிதுபடுத்தி இடிக்கச்சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குத் துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.
 ஏன் செய்கிறார்கள்?
  • இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை.
  • மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த  வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற  ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி – கோயில்கள் அழிப்பு
  • கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்க மயமாக்கலுக்கு) பாரம்பரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டுப் பெருமுதலாளிகளும்- தொண்டு அமைப்புக்களும்- மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.
  • இந்தியாவின் வரலாற்றைத் திரிக்க நினைக்கும் வெளிநாட்டு- உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.
  • இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்திச் செல்வோரின் நோக்கமும் அதுவே.
  • ஸ்தபதிகளுக்கு, இருப்பதை சீரமைப்பதை விட இடித்துக் கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.
  • சில அறங்காவலர்கள்- பெரிய மனிதர்கள், விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோயிலை இடித்து புதிதாகக் கட்ட நன்கொடை அளித்துத் தூண்டுகிறார்கள்.  கோயில்களை தங்கள் கௌரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.
  • பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோயில் சிதைப்புக் கும்பலின் பணத்திற்கு- சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.
 எப்படிச் செய்கிறார்கள்?
  • முதலில் கோயிலில் அது பின்னம்,  இது குறை என்று மாற்றங்களைச் சொல்லும் இந்த மாஃபியா குழு, கோயில் குழுவினரை ‘தெய்வ குற்றம்’ என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளைச் சொல்லும்போது, கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களைச் சொல்லி, புராதனச் சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.
sandblasting-3
  • சில இடங்களில் கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பழமையான கோயிலையே இடித்துத் தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோயில்கள் என்னும் பெயரில் கட்டடங்கள் கட்டுகிறார்கள்.
  • சுத்தப்படுத்துகிறேன் என்னும் பெயரில், கோயிலின் சுவர்களிலும்,  தூண்களிலும் சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும்  (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும்; காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.
  • வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.
  • கருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் ஃபோகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது,  கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோயில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோயிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.
இப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.
சில உதாரணங்கள்:
  • தஞ்சை பெரிய கோயில்–  கல்வெட்டுக்களும், புராதனச் சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008).
(http://janajaati.blogspot.in/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html)
  • திருவொற்றியூர் கோயில் – சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு,  கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது  (2013).
(http://www.dinamalar.com/news_detail.asp?id=789444)
  • காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் – கோயிலை விளம்பரத் தளமாக  மாற்றினார்கள். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடின. கோயில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.
(http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847)
  • சேவூர் வாலீஸ்வரர் கோவில் –  கல்வெட்டுக்கள் சேண்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோயில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.
(http://sevurwar3.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)
  • சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதனச் சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று?  கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்
http://www.aazham.in/?p=1718
http://chasingaphrodite.com/tag/art-of-the-past/
  • சிலைக் கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு. சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=zOgpYsUf6Ac
இவை சில உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோகச் சிலைகள் கடத்தப்படுகின்றன. சமீபத்தில் மதுரைக் கோயிலுக்கு சொந்தமான ரூ. 66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோயில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோயில்கள் வரை இந்த மாஃபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.
மக்கள் செய்யவேண்டியது என்ன? 
v  நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.
v  கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.
v  சேண்ட் பிளாஸ்டிங் மூலமோ, இல்லை பிற பணிகள் மூலமோ கோயிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாகத் தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
v  கோயிலின் தொன்மையான தூண்கள்,  சுவர் கற்கள், சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதைக் கண்டால் உடனடியாகத் தடுக்க வேண்டும்.
v  கோயிலின் கருவறையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக் கூடாது.  கோயிலின் கருவறைகளின் நீள- அகல- உயரங்களை மாற்றம் செய்யக் கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.
v  செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை- கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோயிலில் பயன்படுத்தக் கூடாது. நாட்டுப் பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
திரிபுவனம் ஆலயம்
திரிபுவனம் ஆலயம்
அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
  • தற்போது நடைபெற்று வரும் அனைத்து கோயில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோயில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மிக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • கோயில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோயிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களைத் தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
  • சிலைக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து, வேரோடும்- வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
  • கடந்த ஆண்டுகளில் நடந்த கோயில் வேலைகளைக் கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களைக் கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.
  • தொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதனச் சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும்.
  • தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை- கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத் துறை வெளியேறி, ஆன்மிகக் குழு, கோயிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்புப் பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
  • புதிய கோயில் பணிகளை, வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மிக அமைப்புக்கள், பக்தர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.
தற்போது நடக்கும் வேகத்தில் கோயில் அழிப்புப் பணிகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் சுற்றுலாத் தலங்கள் இருக்கும்;  கோயில்கள் இராது. இருந்தாலும் அதில் சாந்நித்யம் இராது. மாலிக் காபூர் ஏற்படுத்திய சேதத்தை விட கொடூரமான சேதங்களை தற்போதைய நவீன மாலிக் காபூர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.
அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

செவ்வாய், 6 மே, 2014

ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி


ஸ்ரீகண்டியை நான் முதலில் பார்த்தது மத்திய ஜாவாவின் முக்கிய நகரான செமராங்கின் (Semarang) அஹமத்யானி விமானநிலையத்தின் உள்ளே கலைப்பொருள்களை விற்கும் ஒரு கடையில். 1996 மே மாத இறுதியில் இந்தோநேசியாவில் வேலைக்குப் போன புதிதில் அந்த நாட்டின் பல பகுதிகளில் ஆலைகளைக் கொண்டிருந்த என் கம்பெனியில் அறிமுகப்படலம் என்று ஓரியன்டேஷனுக்காக சுற்றிக் கொண்டிருக்கையில்.
போர்க்கோலத்தில் ஓர் இளைஞன் வில்லேந்திய அழகிய இளம்பெண்ணைத் தழுவியவாறு தொடையில் அமர்த்தி நிற்கும் அந்த வினோத பொம்மையைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். உடன் அருகில் வந்த விற்பனைப்பெண் வாங்குகிறீர்களா என்று வினவ விலை மலைக்கும்படி இருந்ததால் மறுத்தாலும் இதில் இருப்பது யார் என்று கேட்டேன்.
அர்ஜுனனும் ஸ்ரீகண்டியும் என்றாள் அந்தப்பெண். அட சிகண்டி!
சிகண்டியா என்று அதிசயித்துக் கேட்க ‘ஸ்ரீகண்டி! அர்ஜுனன் மனைவி’ என்றாள்.
srikandi_java_1சிகண்டி அர்ஜுனன் மனைவியா! இது என்னடா நான் அறிந்திராத பாரதக்கதையாய் இருக்கிறதே என்று திகைத்து நின்றேன்.
பின்னர் ஜாவாவில் நான் வாழ்ந்திருந்த பத்துவருடங்களில் அந்த நாட்டின் கவி என்ற பண்டைமொழியில் எழுதப்பட்ட ஜாவானிய மஹாபாரதம் நான் அறிந்திராத அதன் பல கிளைக்கதைகளுடன், சிகண்டி, அரவான், கடோத்கஜன், அபிமன்யு, சாம்பன் என்று அதிநுணுக்கமாய் ஒவ்வொரு பாத்திரத்துடனும் விரிய விரிய வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருந்தது.
இன்று அம்பையின் கதையை ஜெயமோகனின்  வெண்முரசு மகாபாரத நாவலில் படித்த உணர்வு மிகுதியில் ஜாவானிய ஸ்ரீகண்டி என்னை எழுதத்தூண்டினாள்.
அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் ஸ்ரீகண்டியின் கதையைத்தான்.
நம்மூரில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி என்றால் ஒட்டுமீசை பொருத்தி கோட், தலைப்பா சகிதம் பாரதியாகவோ, கோமணத்தைக் கட்டி கையில் வேலைக் கொடுத்து முருகனாகவோ எளிதாய் வேடம் கட்டுவதைப் போல் ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு.
*****
ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்.
யாகசாலை அக்கினியில் திரௌபதியும், புகையில் திருஷ்டத்யும்னனும் தோன்றிய பின்னர் மன்னன் துருபதராஜனுக்கும் கந்தவதிக்கும் இயல்வழியில் பிறக்கும் மகள் சிகண்டினி. அவள் பிறந்தபோதில் ‘இந்தக்குழந்தை பீஷ்மரைக் கொல்லவே பிறந்திருப்பவள். இவளை ஆணாகவே வளர்த்திடுக’ என்று தேவதைகள் சொல்ல அதைக் கேட்டஞ்சும் மன்னன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாது அவளை வளர்க்கிறான்.
srikandi_java_2சிறுவயதிலிருந்தே அஸ்திரப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிகண்டினி ஓர் ஆணைப் போலவே வளர்கிறாள். மணம்முடிக்கும் பருவம் வருகையில் ஆண்தன்மையே மிகுந்திருக்கும் சிகண்டினி ஒரு பெண்ணையே விரும்பி மணக்கிறாள். மணநாளிரவில் கணவன் ஆணல்லன் என்று மனைவிக்குத் தெரியவந்து அழுதுபுலம்ப, சிகண்டினி அவளை விடுத்து வனவாசம் செல்கிறாள்.
வனத்தில் திரிந்திருக்கையில் யட்சன் ஒருவன் இரக்கம் கொண்டு சிகண்டினிக்கு ஆணுறுப்பைத் தந்து சிகண்டியாக்கி, விரும்புகையில் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் வரத்தையும் நல்கி, காமக்கலையின் நுணுக்கங்களையும் சொல்லித் தருகிறான். வீடு திரும்பும் சிகண்டி மனைவியுடன் இல்லறத்தைத் தொடர்ந்து நடத்துகிறான்.
பின்னர் அண்ணன் திருஷ்டத்யும்னன் அஸ்தினாபுரியில் துரோணரிடம் வில்வித்தை கற்கச் செல்கையில் உடன் செல்லும் சிகண்டி அங்கு அழகன் அர்ஜுனனைக் கண்டு அவன் மேல் காதல் கொண்டு மீண்டும் பெண்ணாகிறாள். அர்ஜுனனிடம் பயிற்சிபெறும் அபிமன்யு முதலானோருடன் சேர்ந்து தானும் வில்வித்தை கற்கிறாள். சடுதியில் கற்றுத் தேரும் சிஷ்யை சிகண்டினியின் திறமையால் கவரப்படும் அர்ஜுனன் ஒருகட்டத்தில் காதல்வயப்பட்டு அவளை மணந்து கொள்கிறான்.
பின் சிகண்டினி வீடுதிரும்பி சிகண்டியாகி ஆண்வேடம் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து, பாரதப்போரில் பீஷ்மரைப் பழிவாங்கவே மீண்டும் அர்ஜுனனிடம் சேர்வதற்குப் பெண்ணாகித் திரும்பி வருகிறாள்.
அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி
அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி
குருக்ஷேத்திரப்போரில் ஸ்ரீகண்டி எவ்வாறு பீஷ்மரை வீழ்த்துகிறாள் என்பதில்தான் அவள் ஜாவாவின் நாயகி ஆகி நிற்கிறாள்.
முற்பிறவியில் தன்னை அலைக்கழித்த வன்மத்தை மறக்காமல் காங்கேயன் பீஷ்மரை இப்பிறவியில் வென்றழிக்க காங்கேயன் முருகனையே இஷ்டதெய்வமாய்க் கொண்டு கடும்தவம் மேற்கொள்கிறாள் ஸ்ரீகண்டி.
தவத்தால் உருவேற்றப்பட்ட தாந்த்ரீக பலம் (Thaumaturgic) கொண்ட ஸ்ரீகண்டியின் வில் ஜாவானியக் கூத்துகளில் வியந்தோதிப் பாடல்பெறும் தனிச்சிறப்புடையது. விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி. அதிலிருந்து எய்யப்படும் அம்பு தார்மீகத்தில் பிறழாது நிற்பவன், நியாயவான் எனில் கொல்லாது திரும்பும். ஆனால் தர்மத்திலிருந்து சற்றும் பிறழ்ந்தோனைத் தவறாது கொல்லும்.
srikandi_java_3
இங்குதான் இந்திய ஜாவானிய பாரதக்கதைகளிடையே முக்கியமான வேறுபாட்டினைக் காண்கிறேன். இந்தியப்பதிப்புகள் எல்லாவற்றிலும் பீஷ்மர் 100 விழுக்காடு அப்பழுக்கில்லா அறவானாகவும், தம் சாவினை தாமே முடிவு செய்யும் வரவானாகவும், அம்பையை எதிர்கொள்ள விருப்பமின்றி விட்டுக்கொடுக்கும் சுத்தவீரனாகவும் காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் – ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் – அர்ஜுனனைப் பின்தள்ளி, நிராயுதபாணியாய் நிற்கும் பீஷ்மரைக் கொல்லப்பார்க்கும் சற்றே வில்லத்தனம் கலந்த நபும்ஸகன் சிகண்டியின் பிம்பமே என்னுள் இருந்தது. இந்தியர் பலருக்கும் அவ்விதமே இருக்கலாம். மேலும் பீஷ்மர் தம்மை வீழ்த்தும் அம்புகளை உருவி எடுத்துப்பார்த்து இவை அர்ஜுனன் எய்தவையே என்று மகிழ்ந்து உயிர்வாழும் வேட்கை விடுத்துப்பின் தேரிலிருந்து வீழ்வது போல் கதை செல்லும்.
ஜாவானியப் பதிப்பில் அம்பைக்கு பீஷ்மரிலும் உயர்ந்த தேவிவடிவம் தந்து அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள் எய்யும் ஹ்ருஸாங்கலியின் அம்பே பீஷ்மரை வீழ்த்தித் தீர்ப்பையும் நிறுவுகிறது.
அதனால்தான் அவள் நாயகி! ஜாவானிய, சுந்தானிய, இந்தோநேசிய மொழிகளில் நாயகி என்றாலே ஸ்ரீகண்டிதான். ஐயம் கொண்டோர் கூகிள் மொழிபெயர்ப்பானைச் சொடுக்கவும் –http://translate.google.com/#id/ta/srikandi
மேலே மடித்து நிமிர்த்தக்கூடிய ஹ்ருஸாங்கலி என்ற அம்பாதேவியின் வில்லின் அமைப்பு எப்படி இருக்குமென்று பலரும் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார்.  படம்: கூகிள் உபயம்.
srikandi_bow_java
*******
ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.
ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.
ஜாவாவில் ‘வாயாங் குலித்’ (Wayang Kulit) என்ற தோல்பாவைக் கூத்தின் மூலம் இப்படி ஏராளமான மகாபாரதக் கதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதை நடத்துவோர் தத்தம் சொந்தப்பார்வையில் சில அற்புதமான கருத்துகளை கதையினூடே சொல்லிப்போவார்கள்.
‘ஸ்ரீகண்டியின் மந்திரசக்தி வாய்ந்த அம்பால் எப்படி தர்மத்திலிருந்து வழுவாத பீஷ்மரை வீழ்த்த முடிந்தது!’ என்று கேள்வி கேட்டு அவரே அபாரமான பதிலும் சொல்வார்.
‘பீஷ்மரான தேவவிரதர் தாம் தந்த வாக்கை எந்நாளும் மீறாத சத்தியவாழ்க்கை வாழ்ந்தவர்தாம். அவர் அப்படியே இருந்திருந்தால் அம்பையால் அவரை வீழ்த்தியிருக்கவே முடியாது. ஆனால் என்று பீஷ்மர் அதர்மத்தின் பக்கம் துணை போனாரோ அன்றே அவர் வீழ்ச்சி தொடங்கியது. தேவி திரௌபதியை சபை நடுவே துகிலுரிந்ததைப் பார்த்தும் அமைதி காத்தாரே அன்றே அவரைக் கொல்ல தேவி ஸ்ரீகண்டியின் அஸ்திரமான ஹ்ருசாங்கிலிக்கு சக்தி வந்து விட்டது!’
ஸ்ரீகண்டியின் தொன்மக்கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் அவர்களிடை இருந்து வருவது. மத்திய ஜாவாவின் மாஜாபஹித் (Majapahit) அரசில் ஸ்ரீகண்டி சேனை என்று போர்ப்பயிற்சியில் சிறந்த பெண்களின் படையே தொடர்ந்து இருந்திருக்கிறது.

ஒருமுறை மத்திய ஜாவா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது இயற்கை அரசாளும் டியாங் பீடபூமியில் (Dieng Plateau) அமைந்திருக்கும் 1300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாண்டவர்களின் கோயில்களைப் பார்த்தோம். ஸ்ரீகண்டியின் ஜாவானியக் கதைக்கு ஆதாரசாட்சியாய் அங்கே அர்ஜுனன் கோயிலுக்குப் பக்கத்திலேயே தேவி ஸ்ரீகண்டிக்கும் கோயிலைக் கண்டு வியந்து நின்றேன்.  Candi Srikandi என்றே இக்கோயில்  அழைக்கப் படுகிறது.
candi_srikandi_temple_java
ஜாவா தீவின் மத்தியப் பகுதியில் Dieng Plateau வில் உள்ள கோயில்கள்
அம்பையின் கதை அங்கே என்றும் உயிர்த்திருக்கும். இன்றும் பெண்ணுரிமைக் குழுக்கள் மட்டுமின்றி, மாற்றுப்பாலினக்குழுக்கள் பலவும் – நம்மூரில் அரவானைப்போல் – ஸ்ரீகண்டியின் பெயரில் தங்களை அமைப்பு ரீதியாய் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இப்படி ஓர் அமைப்பு சமீபத்தில் எடுத்த ‘அனக் அனக் ஸ்ரீகண்டி’ (Anak Anak Srikandi – ஸ்ரீகண்டியின் குழந்தைகள்) என்றொரு குறும்படம் உலகத்திரைப்பட விழாவொன்றில் பரிசு வென்ற